states

img

மராத்தா இட ஒதுக்கீடு மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீடு மற்றும் அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே (40) கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.  இந்த உண்ணாவிரதப் போராட்டம் 2 வாரத்தை தாண்டியதால் பதறிய பாஜக கூட்டணி அரசு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக ஒப்புதல் அளித்தது. இதனால் செப்.14 அன்று உண்ணாவிரதத்தை கைவிட்ட மனோஜ் ஜராங்கே மராத்தா இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசுக்கு 40 நாட்கள் கெடு விதித்தார். இந்த கெடு அக்.,24 அன்றுடன் நிறைவடைந்த நிலையில், மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மராத்தா இடஒதுக்கீடு பற்றி சாதாரண அறிவிப்பை கூட வெளியிடாமல் இருந்தது.  இதனால் கடந்த வாரம் மராத்தா இடஒதுக்கீட்டை அக்.,24-க்குள் அமல்படுத்தவில்லை என்றால் அக்., 25 அன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்க உள்ளதாக மனோஜ் ஜராங்கே எச்சரிக்கை விடுத்தார். எச்சரிக்கையை பாஜக கூட்டணி அரசு கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், அறிவித்தது போலவே அக்., 25 அன்று (புதன்) அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள் பலர் திரண்டுள்ளதால் மீண்டும் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது.