states

img

ஆர்எஸ்பி பொதுச் செயலாளராக மனோஜ் பட்டாச்சார்யா தேர்வு

புதுதில்லி, நவ.14- தில்லியில் நடைபெற்ற புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அதன் பொதுச் செயலாளராக மனோஜ் பட்டாச் சார்யா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். 53 பேர் கொண்ட மத்தியக் குழுவில் வலது சாரி முன்னணியுடன் கரம் கோர்த்துள்ள கேர ளாவில் இருந்து ஏ.ஏ.அஜிஸ், என்.கே. பிரேமச்சந்திரன் எம்.பி., ஷிபு பேபிஜான், பாபு திவாகரன், இல்லிகல் அகஸ்தி, கே. எஸ்.வேணுகோபால், கே.எஸ்.சனல்குமார், பி.பிரகாஷ் பாபு, கே.எஸ்.சிவகுமார், கே.சன்னிகுட்டி, கே.சிசிலி, ஜே.மது,  ஜி.ராஜேந்திரா ஆகியோர் இடம் பெற்றுள் ளனர். ஏழு சிறப்பு அழைப்பாளர்களும் கேரளத்தில் இருந்து உள்ளனர்.

இடதுசாரி மதச்சார்பற்ற  கட்சிகளின் ஒற்றுமை 

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக இடதுசாரி மதச்சார்பற்ற ஒற்றுமைக்கு மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணியை உரு வாக்கும் போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். திரிணா முல் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பெரும் பாலும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப் பாட்டை எடுப்பதால், எதிர்க்கட்சிகளின் கூட்ட ணிக்கான கட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.  விலைவாசி உயர்வு மற்றும் வேலை யின்மைக்கு எதிராக டிசம்பரில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற அணிவகுப்பு நடத்துவது குறித்து மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.