மாநிலத்திலும் ஒன்றியத்திலும் ஒரு கட்சி ஆட்சிதான். அப்படி இருந்தும் மணிப்பூர் மக்களி டையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு? இன்னமும் தணியவில்லை. இந்த சூழ்நிலையில், அங்குள்ள மாணவர் அமைப்பு தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தனர். மீண்டும் அமைதியை ஏற் படுத்தி சுமூகமான உறவை ஏற்படுத்த ஆதரவு தரக் கோரி சென்னையில் சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனை சந்தித்தனர். அப்போது தீக்கதி ருக்கு அளித்த சிறப்பு நேர்காணல். மணிப்பூர் சமவெளியில் வசிக்கும் இந்து, முஸ்லிம் பங்கல், கிறிஸ்தவர்கள், ஜெயினர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ‘மெய்டி’ சமூகம் 64 விழுக்காடு. உயர் சாதி முதல் தாழ்ந்த சாதி வரை உள்ள இந்த மக்களை வேலையில் இருப்பவர்கள் என்று கூறுவார்கள். மற்ற சமூகம் குக்கி, நாகா பழங்குடி. இது தவிர, சிறிய பழங்குடி குழுக்களை சேர்ந்த பல இன,மொழி ரீதியான வேறுபட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் மலை பகுதிகளில் பிரதானமாக வசிக்கின்றனர்.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 24 விழுக்காடு. இவர்களைத் தவிர தமிழர்கள், சீக்கியர்கள் என்று பிற சமூக மக்களும் சாதி, மதம், இனம் கடந்து நீண்ட காலமாகவே ஒற்றுமையாக தான் வாழ்ந்து வந்த னர். வணிக உறவுகளும் சுமுகமாக நீடித்தது. நிம் மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டி ருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நிலப்பரப்பில் வசித்து வரும் பிராமணர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து சாதிகளையும் உள்ளடக்கிய மெய்டி மக்களை பழங்குடி பட்டியலில் இணைப் பது சாத்தியமில்லை. இது தெரிந்தும், மெய்டி சமூகம் பழங்குடியினரை பட்டியலில் சேர்த்தால், மலைகளில் நிலம் வாங்க முடியும். அங்கேயே வசிக்கலாம். இட நெருக்கடியும் தீர்ந்துவிடும் என்றெல்லாம் ஆசைகளை தூண்டிய ஆர்எஸ் எஸ், ‘மக்கள் பாதுகாப்பு’ இயக்கம் என்ற பெயரில் கிராமங்களில் ஊடுருவி கலவர தீயை மூட்டியது. மணிப்பூர் நீதிமன்றமும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகைமையை உருவாக்கியது போதாக்குறைக்கு, மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வன நிலங்களை ஆக்கிரமித்து, பழங்குடி மக்க ளுடன் போதைப்பொருள் சாகுபடி செய்து விற்பனை செய்கிறார்கள் என்றெல்லாம் மாநில முதலமைச்சரே பொதுவெளியில் பேசியதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மலை மக்களை துன்புறுத்தியதும் குக்கி, நாகா உள்ளிட்ட 36 பிரிவுகளைச் சார்ந்த மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் வகுப்புவாத அரசியலில் சிக்கிய மலை மக்களும் சமவெளி மக்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் சமூக பேரினவாதம் மிகத் தீவிரமாக தலையெடுத்துள் ளது. தற்போதைய கலவரத்தின் பின்னணியில் பாஜக அரசுதான் உள்ளது.
தனிநாடு தீர்வாகாது!
ஒரு சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. ஒரு இனத்தின் குணாதிசயங்கள், தனித்துவமான கலாச்சாரம், புவியியல் தனிமைப்படுத்தல், சமூகத்துடன் பெரிய அளவில் தொடர்பு கொள்வதில் கூச்சம், பின்தங்கிய தன்மை இதில் அடங்கியுள்ளது. இதனால்தான் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரி வித்தது. மெய்டி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல, அந்தக் கோரிக்கையில் கொஞ்சம் கூட நியாயம் கிடை யாது. ஆனாலும், மணிப்பூரின் கொந்தளிப்பை பார்த்த இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் எதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் பழங்குடியினத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தனிநாடு கோரிக்கை யை கையில் எடுத்துள்ளனர்.
வறுமையும்-சோகமும்!
இந்தியாவின் மூன்றாவது ஏழ்மையான மாநிலம் மணிப்பூர். சுமார் 37 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கின்றனர். குறைந்த பட்ச தனிநபர் வருமானத்தில் இம்மாநிலம் தெற்கா சியா நாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்க ளின் வாழ்க்கையும் ‘சொர்க்கமாக’ இல்லை. இதற்கு முக்கிய காரணம், ஒன்றிய மாநில பாஜக அரசுகள் கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாகும். சமவெளிப் பகுதியோடு ஒப்பிடுகையில் வறு மைக் கோட்டில் கீழ் வாழும் மக்கள் மலைப்பகுதி யில் மிக மிக அதிகம். பள்ளத்தாக்கில் ஏழு பல் கலைக்கழகங்கள் இருக்கும் நிலையில், ஒட்டு மொத்த மலை மாவட்டங்களுக்கும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் உள்ளது. அதுவும் இம்பா லில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பிரதேசங்களில் உள்கட்டமைப்பு என்பது பழங்குடி மக்கள் ஏணி போட்டாலும் எட்டாத தூரத்தில் உள்ளது. ஏன் என்றால்? மியான்மர்-மணிப்பூர் எல்லை யில் உள்ள ஒரு சிறு கிராமம் முர்ரே. அங்குள்ள ஒருவர் தனது குடும்பத்திற்கு பிறப்பு,இறப்பு சான்று அல்லது எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் இம்பாலுக்கு தான் வர வேண்டும். இவ்வளவு ஏன்? அரசு அலுவலக வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இதே நிலைதான். இதற்கு குறைந்தது மூன்று நாட்களை செலவிட வேண்டும். மலை மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கியே உள்ளனர். வேலைவாய்ப்பு கள், வாழ்வாதாரம் குறைந்துள்ளது. வரலாற்று ரீதியாக 90 விழுக்காடு பரப்பளவை மலைப்பகுதி கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் வாழத் தகுதியற்றதாகவே உள்ளது.
ஆனால், இதற்கு நேர் மாறாக உள்ளது பள்ளத் தாக்கு பகுதி. மெய்டி மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் பெரிதாக பிரச்சனை இல்லை. விவசாயத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மணிப்பூர் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை அடர்த்தி குறைவு தான். நில நெருக்கடி அதிகம் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். கனிமம் வளங்கள் நிறைந்த மணிப்பூரில் கார்ப்பரேட், சர்வதேச நிறுவனங்கள் கோடி கோடி யாய் பணத்தை கொட்டி இறைத்து வருகின்றன. பன்னாட்டு பகாசுர முதலாளிகளுக்கு சேவகம் செய்து வரும் பாஜக அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை குக்கி,நாகா (கபுய்), மெய்டி, பங்கல்ஸ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த 300 குடும்பங்களை வெளியேற்றி இருக்கிறது. இதில், 160 குடும்பம் பழங்குடி அந்தஸ்து கேட்கும் மெய்டி சமூகமாகும்.
பல்லில்லா கவுன்சில்!
வடகிழக்கு மாநிலங்களில் நமது அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் மலை மாவட்டங்களில் தன்னாட்சி மாவட்ட கவுன் சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, மணிப்பூரில் ஆறு தன்னாட்சி மாவட்ட கவுன்சில் கள் உள்ளன. தற்போது கூடுதலாக 6 மாவட்டங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், மேலும் நான்கு மாவட்ட கவுன்சில்கள் அமைக்க வேண்டும். இதுவரை மாநில பாஜக அரசு முயற்சியும் எடுக்க வில்லை. இது ஒரு புறம் இருக்க, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மணிப்பூரில் அதிகாரத்தை குறைத்து விட்டனர். மாநில ஆளுநரே, தனது நேரடி கட்டுப் பாட்டின் கீழ் மாவட்ட கவுன்சிலின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதால் பல்லில்லாத அமைப்பாக நீடித்து வருகிறது. அத்துடன் நீண்ட காலமாக மாவட்ட கவுன்சில்களுக்கான தேர்தலையும் நடத்தவில்லை. மறுபுறத்தில், மணிப்பூர் பழங்குடி மக்களின் நில உடைமை சட்டங்கள், 2006 வன உரிமை சட்டம், நில வருவாய் மற்றும் 7ஆவது நில சீர் திருத்தம், நிர்வாக சுயாட்சி வழங்கும் பிரிவு 371 சி என பலவற்றையும் மாற்றுவதில் மட்டும் ஆர்வம் காட்டு கிறது மாநில பாஜக அரசு. இதற்கு எதிராக 632 நாட்கள் போராட்டத்தில் 9 உயிரை பலி கொடுத்த னர் பழங்குடி மக்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சிகள்!
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் தங்கள் தொகுதிகளை வலுப் படுத்த சிறுபான்மை சமூகங்களை துன்புறுத்தும் போக்கு சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இதற்கான விதையை விதைத்ததே பாஜக தான். அசாம் மாநிலத்தில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அஹோம் சமூகத்தினரை தொடர்ந்து அணி திரட்டி வருகிறது பாஜக. இஸ்லாமிய சமூகத்தை ‘வந்தேறிகள்’ என்று கூறி ஓரங்கட்டுவது அதி கரித்து வருகிறது. இந்தப் புறக்கணிப்பு மற்றும் பாகுபாடு அசாம்-மிசோரம் எல்லை முழுவதும் மோதலுக்கு வழிவகுத்தது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை அமைத்த பிறகு, வடகிழக்கு மாநிலம் முழுவதும் பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக சமூக மக்களிடையே இத்தகைய வெறுப்பு விதையை விதைத்தி ருக்கிறது. முதலாளித்துவத்தின் அடையாள சட்டங்க ளால் வன்முறை கட்டுக்கடங்காமல் தறிகெட்டு சென்றது. இது இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டு பெரும் சவால் விடுகிறது. தற்போது நிலவும் மோதல் போக்கை முழுமையாக கட்டுக் குள் கொண்டு கொண்டு வந்து இயல்பு நிலையை உருவாக்க முடியும். பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களும் உழைப்பாளி மக்களும் உடனடி யாக நிவாரணம் வழங்க வேண்டியது அவசர அவசிய தேவையாகும்.
தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு