போபால், மார்ச் 9- மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், பள்ளிகள் மூடப்பட்டிருந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில், சீருடைக்கான செலவு என்று ரூ. 351 கோடி கணக்கு காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சி லால் மேதா இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தொற்றின்போது பள்ளி கள் மூடப்பட்ட நிலையில் மாணவர் களுக்கு ரூ. 351 கோடி செலவில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டதாக கூறப் படும் நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியிருக்கும் பஞ்சி லால் மேதா, இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். இதற்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்: “கொரோனா தொற்று பொதுமுடக்க காலமான 2020- 21 நிதியாண்டில் மாநி லத்தின் 50 மாவட்டங்களில் சுமார் 1.17 கோடி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை கள் வழங்கப்பட்டுள்ளன. அப்போது, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகளும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் ‘எங்கள் வீடு, எங்கள் பள்ளி’ திட்டத்தின் கீழும் படித்து வந்தனர். மேலும், சுய உதவிக் குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்து வழங்கின. கொரோனா நெறிமுறைக்கு இணங்க பள்ளி நிர்வாகக் குழு மூலம் சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வரும் புகார்கள் சுய உதவிக்குழுக்களைக் கட்டுப்படுத்தும் துறையால் கவனிக் கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.