states

‘நாகரிக சமூகத்திற்கு அழகல்ல’

சென்னை, ஆக.9- தேனி மாவட்டத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து  காவல்துறை உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காந்தி  நகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 22), அதே  பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 17)  ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டு களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் திரு மணம் செய்துகொள்ள வீட்டில் எதிர்ப்பு இருந்த துடன், மாரிமுத்து தலித் என்பதால் பெண்வீட் டில் கூடுதலான எதிர்ப்பு இருந்துள்ளது. மகா லட்சுமிக்கு திருமண வயது இல்லாததால் மாரி முத்துவின் மீது போக்சோ வழக்கும் பதியப பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி யன்று மகாலட்சுமி, மாரிமுத்துவின் வீட்டிற்குச் சென்று என்னை திருமணம் செய்து கொள் என்று  வற்புறுத்தியுள்ளார். இதனால் மாரிமுத்து குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்து, காவல் துறையினர் தலையிட்டு பெண் வீட்டா ருடன் பேசி மகாலட்சுமியை அனுப்பி வைத்  துள்ளார்கள். முற்றிலும் எதிர்பாராத நிலை யில் கடந்த 5.08.2023 அன்று காந்தி நகர்  அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும்  மகாலட்சுமி ஆகிய இருவரும் ஒரே மரத்தில் அருகருகே தூக்குப் போட்டு இறந்துள்ளனர். கால்கள் இரண்டும் தரைதட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததால் அது கொலையா, தற்கொலையா என்றும், சாதி  ஆணவத்தால் நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலையாக இருக்கலாம் எனவும் பரவ லாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தற் கொலையே என்றாலும் அதற்கு தூண்டிய வர்கள் மீது வழக்கு பதியப்பட வேண்டும். ஆகவே இவர்களது மரணத்தில் பலத்த சந்தேகம் உள்ளதால் காவல்துறை உரிய முறை யில் விசாரணை செய்து, குற்றவாளிகள் அடை யாளம் காணப்பட்டு வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு  உரிய பாதுகாப்பு வழங்கிடுக!

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியினர் தொடர்ந்து மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருவதும், அதை தடுப்ப தற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளாததால் தற்போது இந்த இளம் தம்பதி யினரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்த கைய போக்கினை அனுமதிப்பது நாகரிக சமூ கத்திற்கு அழகல்ல என்பதை உணர்த்த வேண்  டும். இவ்வாறு காதலர்கள் பிரச்சனை என்று காவல் நிலையம் மற்றும் அதிகாரிகளின் கவ னத்திற்கு வரும் போது விசாரித்து விட்டு வீட்டுக்கு அனுப்புவதற்கு மாறாக, அவர்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல்துறையினர் தங்களது பராமரிப்பில் வைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.