புதுதில்லி, பிப்.12- கோவிட்-19 சிகிச்சைக்கு உத விடும் ரெம்டெசிவர் மருந்து உற் பத்தி செய்ய ஏழு இந்திய நிறு வனங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதில்கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நட ராஜன், கோவிட் 19 பெருந்தொற் றுக்கு சிகிச்சை அளிப்பதில் திற னுள்ள, வைரஸுக்கு எதிராகப் போரா டும் ரெம்டெசிவர் மருந்தின் பொது வான பதிப்பினை, ஒரு பிரபலமான இந்திய மருந்து நிறுவனம் உரு வாக்கியுள்ளதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன? ரெம்டெசிவர் மருந்தின் பொதுவான பதிப்பை உற் பத்தி செய்யும் உற்பத்தியாளர் களுக்கு, கட்டாய உரிமங்கள் வழங்குவதற்கு அனுமதியளிக்கும் முன்மொழிவு ஏதேனும் அரசிடம் உள்ளதா? அதன் விவரங்கள் என்ன?
இல்லை எனில் அதன் காரணங் கள் என்ன? ரெம்டெசிவர் மருந்தின் பொதுவான பதிப்பை, அரசு அமெ ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறதா அதன் விவரங்கள் மற்றும் அனுப்பப் பட்ட மருந்தின் அளவுகள் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதில ளித்த சமூகநலம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி ப்ரவீண் பவார், ரெம்டெசிவர் என்பது காப்புரிமை பெற்ற மருந்து. அமெரிக்காவின் கிலியட் லைஃப் சயன்சஸ் என்ற காப்புரிமை வைத்திருக்கும் நிறு வனத்தால், தன்னார்வ உரிமங்க ளின் கீழ், ஏழு இந்திய மருந்து நிறு வனங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டு இந்தியாவில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வெளி நாட்டு வர்த்தக பொது இயக்குநர கத்திலிருந்து (DGFT) கிடைக்கப் பெற்ற தகவலின்படி இரண்டு நிறு வனங்களுக்கு ரெம்டெசிவர் மருந் தின் 3600 குப்பிகளை அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரெம்டெசிவர் ஏற்றுமதி என் பது தடை செய்யப்பட்ட வகையின் கீழ் வருகிறது என்றும் கூறினார்.