states

இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது

“தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி.  சிலிண்டர் விலையை ரூ. 1,000வரை உயர்த்தி விட்டு ரூ. 200 மட்டும்குறைத்து நாடகமாடு கின்றனர். விலைவாசியை குறைப்பது, வேலை யின்மையை நீக்குவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். புலனாய்வு அமைப்புகளை கொண்டு  எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு மிரட்டி வரு கிறது. ஆனால், ரெய்டு, மிரட்டலை எதிர்கொள்ள  நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறையில்லை; பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது. ஊழலை ஒழிப்பதைப் பற்றி பேசும் பாஜகதான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது; அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்” 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

‘இந்தியா’ கூட்டணியே தேசபக்தர்கள்: உத்தவ் தாக்கரே

“நாளுக்கு நாள் ‘இந்தியா’ வலு வடைந்து வருகிறது. நாம் நெருங்கி, படிப்படியாக முன்னேறி வர, ‘இந்தியா’வின் போட்டியாளர் (பாஜக) கவலை கொள்கிறார். ‘நாம் அனைவரும் தேசபக்தர்கள், நமது ஒற்றுமையே தேசபக்தர்களின் ஒற்றுமை’ என்று சொல்லியிருந்தேன். ‘வரும் தேர்த லில் போராடுவோம்’ என்று முடிவு செய்துள் ள்ளோம். கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவோம். ‘இந்தியா என் குடும்பம், நாம் அனைவரும் இந்தியர்கள்’ என்று பெங்களூருவில் சொல்லியிருந்தேன். தேர்த லின் போது ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற  பிரச்சாரத்தை கேட்டேன். ஆனால், தேர்தலில்  வெற்றிபெற்ற பிறகு, உங்களுடன் இருப்பேன்  என சொன்ன அனைவரும் வெளியேறிவிட்ட னர். ஒருவரின் (மோடி) நண்பருக்கு (அதானி) மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அரசியலை தொடர அனுமதிக்கக் கூடாது”

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மோடியின் கனவு தகர்ந்துவிட்டது: நிதிஷ்குமார் 

“இந்தியா கூட்டணி உடையும் என்ற மோடியின் கனவு தகர்ந்துவிட்டது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்” 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

மோடியை தோற்கடிப்பது நிச்சயம் : ராகுல் காந்தி

“சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம். தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வையும் நட்புணர்வையும் இந்தக் கூட்டங்கள் ஏற்படுத்தி யுள்ளன. கருத்து வேறுபாடுகளை களைவதில் சிறந்த புரிதலோடு தலைவர்கள் செயல்படு கின்றனர். வரும் தேர்தலில் மோடியை ‘இந்தியா’  கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம். ஏழை மக்களி டம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் திட்டம். ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். இந்தியா கூட்டணி பாஜ கவை நிச்சயமாக வீழ்த்தும். ஊடகங்களையும் தளைகளில் இருந்து விடுவிக்க இந்தியா கூட்டணி உறுதி பூண்டுள்ளது” 

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி 

இது 140 கோடி இந்தியர்களின் கூட்டணி : கெஜ்ரிவால்

தொழிலதிபர்கள் நலனுக்காகவே மோடி தலைமையிலான பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால், 140 கோடி இந்தியர்களுக்கான கூட்டணியே ‘இந்தியா’ .

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பொய்களைப் பேசி வந்தவர்தான் மோடி : லாலு பிரசாத்

“கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களின் வங்கிக்கணக்கில் போடுவ தாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி யளித்தார். ரூ. 15 லட்சம் தரப்படும் என்ற மோடி யின் வாக்குறுதியால் நானே வியப்படைந்தேன். பாஜக கூட்டணி பொய் மற்றும் வதந்திகளைப் பரப்பி ஆட்சிக்கு வந்ததை மக்கள் நன்கு  அறிவர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல்  இருந்ததால்தான் மோடி வெற்றி பெற்றுவிட்டார். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகிவிட்டனர். நாட்டில் தற்போது சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கின்றனர்”

 ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்