states

img

‘நியூஸ் கிளிக்’ மீதான புகார் பொய்யாக கட்டமைக்கப்பட்டது

சென்னை, அக். 13- ஊடகங்கள் மீதான பாஜக அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து, ‘பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் புதனன்று (அக். 11) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட் டத்தில் மதிமுக  பொருளாளர் செந்திலதிபன் பேசுகையில், பிரதமர் மோடியை எதிர்த்து பேசினால் தேசவிரோதம், இந்துத்துவ- பாசிச சக்திகளுக்கு எதிராக எழுதினால் தேச விரோதம் என்று கூறுகிறார்கள். 2020ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற வினோத் சுபா என்ற  பத்திரிகையாளர், பயங்கரவாத நடவடிக் கைகளையும், மரணத்தையும் பிரதமர்  மோடி வாக்கு வங்கிக்காக பயன்படுத்து கிறார் என்று கூறினார். உடனே அவர் மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட் டது. இப்படி இவர்கள் பத்திரிகை யாளர்களை மட்டும் வேட்டையாடுவ தில்லை. அறிஞர்களை, பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களை, கவிஞர்கள், வழக்க றிஞர்கள் என அனைவரையும் வெற்றுக் காரணத்தைக் கூறி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இறுதி முடிவுரை எழுதும் காலம் நெருங் கிக் கொண்டிருக்கிறது. அதை இந்திய மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று அவர் கூறினார்.

திருமுருகன் காந்தி (மே17 இயக்கம்) பேசு கையில், நியூஸ் கிளிக் ஊடக நிறு வனத்திற்கு சென்ற மோடி அரசின் ஏவல் துறை அங்கிருந்த செய்தியாளர்களிடம் கேட்ட கேள்வி என்னவென்றால், தில்லி யில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற உங்களுக்கு நிறுவனம் ஏதாவது கூடுதலாக பணம் கொடுத்தார்களா, இந்த போராட்டத்தை ஆதரித்து தினசரி செய்தி வெளியிட்டீர்களா என கேட்டுள்ளார்கள். ஊடகங்கள் போராட்டத்தை ஆதரிக்காமல் வேறு என்ன செய்யும் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. பிரதமரை தேர்ந்தெடுப்பது அந்த நாட்டை காப்பதற்குத்தான். ஆனால் நாம் இன்று பிரதமரிடம் இருந்து நாட்டை காக்க போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார். நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது  அப்பட்டமான பொய்யாக கட்டமைக்கப் பட்ட குற்றச்சாட்டு. ஏதாவது ஒரு கார ணத்தை கூறி உங்களை முடக்குவோம் என்பதுதான் மோடி அரசின் கொள்கை யாக உள்ளது. ஒரு பாசிச அரசு தனது  இறுதி காலத்தில் மோசமான பயங்கர வாதத்தை கட்டவிழ்ப்பார்கள் என்பதை ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பார்த்திருக் கின்றோம். இந்தியாவில் உஃபா சட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலியாக சித்தரிக்கப்பட்டவை. இந்தியாவின் மாண்பு களை பாஜக அரசு சிதைத்துக் கொண்டிருக்கி றது என்றார்.