states

img

ரூ.70 கோடி நிலத்தை ரூ.1.75 லட்சத்திற்கு வாங்கிய ஹேமமாலினி

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை ஓஷிவாராவில் நடன  அகாடமி கட்டுவதற்காக ஒரு சதுர மீட்ட ருக்கு ரூ.87.50 வீதம் 2,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை ரூ.1.75 லட்சத்துக்கு வாங்கினார் நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி.  அதிக பரப்பளவு கொண்ட நிலத்தை குறைந்த விலைக்கு ஹேமமாலினி வாங்  கியதால் இந்த விவகாரம் கடும் சர்ச்சை யை ஏற்படுத்திய நிலையில், அனில் கல்  காலி என்ற சமூக ஆர்வலர் ஹேமமாலினி  புதிதாக வாங்கிய நிலம் தொடர்பாக தக வல் உரிமை சட்டத்தின் கீழ் மும்பை புற நகர் ஆட்சியர் அலுவலகத்தில் கேள்வி  எழுப்பினார். இதுதொடர்பாக ஆட்சியர்  அலுவலகம் அளித்துள்ள பதிலில், “பிப்ர வரி 1, 1976 அன்று ஒரு சதுர மீட்டருக்கு ரூ.350 என்றளவில் நிலத்தின் மதிப்பு இருந்தது.

ஆனால் தற்போதைய மகா ராஷ்டிரா அரசு, ஹேமமாலினிக்கு விற்ற  நிலம் 25 சதவீத மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியதால்,  நிலத்தின் உண்மையான மதிப்பான ஒரு  சதுர மீட்டருக்கு ரூ.350 என்பதை நான்கில்  ஒரு பங்காக குறைத்து, ஒரு சதுர மீட்ட ருக்கு ரூ.87.50 விலையில்   2,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம் 1.75  லட்சம் ரூபாய்க்கு ஹேமமாலினிக்கு வழங்கப்பட்டுள்ளது. 1997-ஆம் ஆண்டே  நிலத்திற்கு முன்பணமாக ஹேமமாலினி ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டார். இத னால் அவருக்கு ரூ.8.75 லட்சத்தை மாநில  அரசு அவரிடம் திருப்பித் தர வேண்டும்” எனக் கூறியிருந்தார். நடந்தது என்ன? ஹேமமாலினி தற்போது வாங்கி யுள்ள நிலத்திற்கு 1997-ஆம் ஆண்டே முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில சட்டப்போராட்டங்களால் இந்த  நிலத்தை வாங்க முடியாமல் இருந்த நிலை யில், தற்போது மகாராஷ்டிராவை ஆளும்  பாஜக கூட்டணி அரசு 25% ஒதுக்கீடு என்ற  பெயரில் ரூ.70 கோடி மதிப்புள்ள நிலத்தை  ஹேமமாலினிக்கு ரூ.1.75 என்ற பெயரில்  அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளது. நில  மோசடி என்று கூறி “இந்தியா” கூட்டணி  தலைவர்களை அமலாக்கத்துறை உள்  ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் அச்சு றுத்தும் ஒன்றிய மோடி அரசு, நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினியின் நிலமோசடி விவகாரத்திற்கு என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறது? அமலாக் கத்துறையை ஹேமமாலினி வீட்டிற்கும், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகவும் எப்பொழுது ஏவப் போகிறது என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.