states

மணிப்பூர் மாநில அமைதிக்கான குழுவிலிருந்து குக்கி சமூகத்தினர் விலகல்!

இம்பால், ஜூன் 13 - மணிப்பூர் மாநில அமைதிக்கான குழுவில், மாநில முதல்வரும், பாஜக தலைவருமான பைரேன் சிங் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். வாக்குவங்கி அரசியலுக்காக ஆளும் பாஜக பற்றவைத்த நெருப்பு,  மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய் - குக்கி சமூகத்தினருக்கு இடையே யான மிகப்பெரிய மோதலாக வெடித்து, மாநிலமே வன்முறைக் காடாக மாறியுள்ளது. மோதல், படு கொலை, துப்பாக்கிச்சூடு சம்பவங் களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. 20  ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டும், ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை கட்டுக்குள் வந்தபாடாக இல்லை. இந்நிலையில், மிகத்தாமதமாக கடந்த வாரம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால், அமைதிக்  குழு (Peace Committee) அமைக்கப் பட்டது.  மொத்தம் 51 பேர் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், சமூகங் கள் அடிப்படையில், மெய்டெய் சமூ கத்தில் 25 பேருக்கும், குக்கி சமூகத்தில் 11 பேருக்கும், நாகா சமூகத்தில் 10  பேருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. இவர்கள் தவிர, முஸ்லிம் களுக்கு 3, நேபாள சமூகத்தைச் சேர்ந்த வர்களுக்கு 2 என பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குழுவில், முதல்வர்  பைரேன் சிங் இடம்பிடித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடி யினர் அமைதி குழுவில் இருந்து வெளி யேறியுள்ளனர். ஜூன் 15 பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைதிக்குழு கூட்டத்தில் குக்கி பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக் குழு வில் இடம்பெற்றுள்ள பலரிடம், அவர் களின் கருத்துகளை கேட்காமலேயே ஒன்றிய அரசு இணைத்துள்ளதாகவும் குக்கி மக்களின் அமைப்பான ‘குக்கி இன்பி மணிப்பூர்’ (KIM) தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். “குக்கி இன்பி மணிப்பூர், எங்களது  மக்களுக்கு எதிரான வன்முறையை உருவாக்கிய நபர்களுடன் சமா தானத்தைத் தொடர எந்த காரணமும் இல்லை. அமைதி என்பது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஒருங்கி ணைந்த முயற்சியின் விளைவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குக்கி மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பழங்குடி தலைவர்கள் மன்றமும் (ITLF) முதல்வர் பைரேன் சிங் குழுவில் இடம் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  “குக்கி-பழங்குடியின கிராமங்களுக்கு இயல்பு நிலை மற்றும்  பாதுகாப்பு நிலைமைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அமைதிக் குழுக்கள் போன்ற  ஏற்பாடுகள் ஒன்றிய அரசால் செய்யப்பட வேண்டும்” என்று ஐடிஎல்எப் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறி யவர்கள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், அமைதி மற்றும்  இயல்பு நிலை வெகு தொலை விலேயே இருக்கும் என்று மணிப்பூர்  ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணை ப்புக் குழு (COCOMI) என்ற அமைப்பும் குறிப்பிட்டுள்ளது. தங்களின் “இந்தக் கோரிக்கை கள் இந்திய அரசால் புறக்கணிக்கப் பட்டதால், கோகோமியும் (COCOMI) அமைதிக் குழுவில் இருந்து விலகி இருக்கும்” என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீதேந்திர நிங்கோம்பா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.