கேரள மாநிலத்தின் கோழிக் கோடு மாவட்டத்தில் ஆட் கொல்லி நோயான நிபா வைரஸ் பரவல் மீண்டும் அதிக ரித்து வருகிறது. நிபா வைரஸ் தாக்கு தலுக்கு 2 பேர் பலியாகியுள்ள நிலை யில், பாதிப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோழிக் கோடு மாவட்ட கல்வி நிறுவனங்க ளுக்கு செப்.24 வரை விடுமுறை அளிக் கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் கட்டுப் பாட்டு பகுதியாக அறிவித்து நிபா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க 11 குழுக்களை நியமித்துள்ளது கேரள சுகாதார அமைச்சகம். இந்த குழு இரவு, பகல் பாராமல் கோழிக்கோடு மாவட் டத்தை தீவிர கண்காணிப்பில் வைத் துள்ளது. 11 பேருக்கு தொற்று இல்லை நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மற் றும் பலியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1,080 ஆக உயர்ந்துள்ளது. இதில் 297 பேர் நோய் தொற்றுக்கான அதிக ஆபத் துள்ளவர்கள் என பிரிக்கப்பட்ட நிலை யில், அறிகுறிகளுடன் இருந்த 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட் டது. பரிசோதனை முடிவில் 11 பேருக்கும் நிபா தொற்று இல்லை என அறிவிக் கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்பு? கோழிக்கோடு மாவட்டத்தை தொடர்ந்து அண்டை மாவட்டங்களி லும் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ள தாக தகவல் வெளியாகியுள்ளன. கோழிக் கோடு மாவட்டத்தில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 29 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் மலப் புரம் மாவட்டத்தையும், தலா 3 பேர் கண்ணூர் மற்றும் திருச்சூர் மாவட்டத் தையும், ஒருவர் வயநாடு மாவட்டத்தை யும் சேர்ந்தவர்கள் என அம்மாநில சுகா தாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். சபரிமலை வழிகாட்டு நெறிமுறை நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு ஆணையருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செய லருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டைப் போல கர்நாடகா அர சும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தனது மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது புதுச்சேரி அரசு.