பாஜகவிற்கு எதிரான அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இது பிரதமர் மோடிக்கே தெரியும். என்னசெய்வது என்று புரியாமல் இறுதியாக தங்களுக்கு ஆதரவான “கோடி மீடியா” ஊடகங்கள் மூலமும், தங்களுக்கு ஆதரவாக உள்ள ஆய்வு நிறுவனங்கள் மூலம் கருத்துக்கணிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது பாஜக. அதாவது மோடி கூறிய 400 இடங்களை இலக்காக வைத்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்பொழுது பணம் கொடுத்து போலியான பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட சமூக வலைதள ஆய்வு கணக்குகள் மூலம் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இவிஎம் இயந்திரமும்.. கருத்துக்கணிப்பு அறிக்கைகளும்...
சமீபத்தில் நிறைவுபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என உறுதியான கருத்துக் கணிப்புகள் வெளியானது. மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற உடன் கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் கருத்துக்கணிப்புகள் நிறுத்தப்பட்டன. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பு திடீரென பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் ஆதரவு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது. இத்தனை தொகுதிகளில் பாஜக வெல்லும் என தொகுதிகளின் எண்ணிக்கையும் கூறப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் “கோடி மீடியா” ஊடகங்கள் கூறியதை போலவே அதே தொகுதி எண்ணிக்கையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இவிஎம் மீது சந்தேகம்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மோடி அரசு, தேர்தல் ஆணையம், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் மீது வலுவான சந்தேகங்கள் எழும்பியது. ஆனால் மோடி அரசு பல்வேறு வகுப்புவாத அரசியல் சம்பவங்கள் மூலம் இந்த விவகாரத்தை திசை திருப்பியது. 3 மாநில சட்டமன்ற தேர்தலை போலவே தற்போதும் “கோடி மீடியா” ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வேலையில் இறங்கியுள்ளது. தென் மாநிலங்களை போன்று சற்று கவனமாக இருந்தால் பாஜகவின் தேர்தல் தில்லுமுல்லுவை எதிர்கொண்டு மோடியை குஜராத்திற்கு அனுப்பலாம்.