திருவனந்தபுரம், நவ.22- விழிஞ்ஞம் போன்ற நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு இடை யூறு விளைவிக்கும் வகையில் கேரள மாநிலத்தில் சிலர் பிரச்சா ரம் செய்து வருவதாக அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறினார். கடற்றொழில் இயக்குநரகத்தின் ஏற்பாட்டில் புத்தரிகண்டம் மைதானத்தில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் மீனவர் தின நிறைவு நிகழ்வை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் அரசு செய்யாது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு தொகை மீனவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. விழிஞ்ஞம் துறைமுகம் வருவ தால், மீன்பிடிக்கச் செல்ல, கூடுதல் மண்ணெண்ணெய் அனுமதிக் கப்பட்டது. மாநிலத்தின் மீன்வளத் துறை நவீனமயமாக்கப்படும். ஆழ்கடலில் மீன்பிடிக்க கூட்டு றவு சங்கங்கள் மூலம் பாரம்பரிய மீனவர்களுக்கு பயிற்சிஅளிக்கும் நட வடிக்கைகள் துவக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான நவீன வாகனங் களை மாநில அரசு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார். மீனவர்களுக்கான விபத்துக் காப்பீட்டுத் தொகையை யும் அமைச்சர் வழங்கினார். சிறந்த கடைக ளுக்குப் பரிசுகளையும் வழங்கினார். நவம்பர் 18ஆம் தேதி தொடங்கிய மீனவர் தின மேளாவில் கருத்தரங்குகள், வணிகக் கூட்டங்கள்,மீனவர்கள் ஒன்றுகூடல்கள், மீன் வளர்ப்போர் கூட்டம், மீனவர் மகளிர் சங்கம், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.