states

img

வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் கோரி பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு

வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் கோரி பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு புதுதில்லி, மார்ச் 24- கேரளாவில் சில்வர் லைன் (கே-ரயில்) உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதமர் மோடியை முதல்வர் பினராயி விஜயன் வியாழனன்று (மார்ச் 24) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. கே-ரயிலின் சில்வர் லைன் திட்டத்திற்கு இறுதி ஒப்புத லுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, டிசம்பரில் முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு அமைச்சர்களையும், பிரதமரையும் சந்தித்துப் பேசினார். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விரிவான திட்ட ஆவணம் (டிபிஆர்) உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டிருந்தது. ஒன்றிய அரசு கோரிய அனைத்து விவரங்களையும் கே-ரயில் ஏற்கனவே வழங்கியுள்ளது. தற்போது தில்லி வந்துள்ள கே-ரயில் எம்டி அஜித்குமார், ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை புதனன்று (மார்ச் 23) சந்தித்துப் பேசினார்.