புதுதில்லி, மே 27- நிதி ஆயோக்கின் 2020-21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சுகாதாரக் குறியீட்டில் கேரளா முதலிடத்தில் உள் ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள் ளன. சிறிய மாநிலங்கள் பிரிவில் திரி புரா முதலிடத்திலும், தில்லி யூனியன் பிரதேசங்கள் கடைசி இடத்துக்கும் சென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டில், 24 சுகாதார குறியீடுகளை உள்ளடக்கிய கூட்டு மதிப்பெண் முறையை நிதி ஆயோக் கொண்டுவந்தது. இதை பயன்படுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களின் சுகாதாரக் குறியீட்டைக் கணக்கிடத் தொடங்கியது. இது ஒன் றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உலக வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, ஐந்தாவது குறியீட்டு அறிக்கை வெளியாகி உள்ளது. 2022 டிசம்பரில் வெளியிடப்படும் புள்ளிவிவ ரங்களை நிதி ஆயோக் இன்னும் அதி காரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங் கில நாளேடு இதுகுறித்து செய்தி வெளி யிட்டுள்ளது. நிதி ஆயோக் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் மற்றும் ஒட்டு மொத்த செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. 19 பெரிய மாநிலங்கள், 8 சிறிய மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் தர வரிசை தீர்மானிக்கப்படுகிறது. 19 பெரிய மாநிலங்களின் பட்டியலில் கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங் கானா முதல் 3 இடங்களைப் பிடித்துள் ளன. உத்தரப் பிரதேசம் (18), பீகார் (19) மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன. சிறிய மாநிலங்களில் திரி புரா, சிக்கிம், கோவா முதல் 3 இடங்களி லும், மணிப்பூர் கடைசி இடத்திலும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது. இதில் தில்லிதான் கடைசி இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டுகளிலும் கேரளா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.