உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பி.டெக் மாணவியான கீர்த்தி சிங் (19) என்பவரை சிலர் தாக்கி வழிப்பறி செய்ய முயன்றனர். அப்பொழுது அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற கீர்த்தி சிங் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த விவ காரத்தில் கொள்ளையர் என கூறப்படும் ஜிதேந்திரா வை திங்களன்று காஜியாபாத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
குஜராத் மாநிலத்தில் “கர்பா” நடன கொண்டாட் டத்தின் பொழுது 10 பேர் மாரடைப்பு காரண மாக உயிரிழந்த நிலையில், கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக உடல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி யை சுட்டிக்காட்டி ஒன்றிய சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற பாரா கிளைடிங் தளமான பிர் பில்லிங்கில் ரஷ்யாவைச் சேர்ந்த விமானி ஸ்டோய்கோ பயிற்சியின் போது வியாழனன்று காணாமல் போனார். தீவிர தேடுதல் வேட்டைக் குப் பின்னர் நன்ஹர் பகுதிக்கு மேலே 3300 மீட்டர் உயரத்தில் ஸ்டோய்கா உடல் திங்களன்று மீட்கப் பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளை டிங்கின்போது கடந்த 9 நாட்களில் மூன்று விமானி கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் அளவு தொடர்ந்து சரிந் துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் பருப்புகளின் அளவு 3.11 லட்சம் டன்னாக அதிக ரித்துள்ள நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி யாகும் பருப்பு 2.8 லட்சம் டன்னாகக் குறைந்தி ருக்கிறது.
அமெரிக்க அரசு தனது நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் அல்லது அரசுத் துறைகள் வசம் உள்ள 1,440 கலைப்பொருட் களை திருப்பி அனுப்ப முன்வந்துள்ளது. இதனால், விரைவில் அந்த கலைப்பொருட்கள் இந்தியா வர வுள்ளன.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் டிசம்பர் 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என அம்மாநில சபாநாய கர் ராகுல் நார்வேகருக்கு உச்சநீதிமன்றம் திங்க ளன்று உத்தரவிட்டது.