ஹைதராபாத், மார்ச் 10 - “மக்கள் விரோத ஆட்சி நடத்தும் அடக்குமுறையாளர்களையும், அதிகார வெறியர்களையும் தில்லியிலிருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம்” தெலுங் கானா சட்ட மேலவை உறுப்பினரும், அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா வை நிறைவேற்றக் கோரி, பாரத் ராஷ்ட்ரிய சமிதி சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் மார்ச் 10 அன்று பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக கவிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், தில்லி மதுபான ஊழல் வழக்கில், மார்ச் 9 அன்று விசார ணைக்கு ஆஜராகுமாறு, ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை திடீரென சம்மன் அனுப் பியது. இவ்வழக்கில் ஏற்கெனவே சிபிஐ-தான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஆனால், அமலாக்கத்துறை திடீரென இவ்விவகாரத்தை கையில் எடுத்தது, கவிதா அறிவித்திருந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியே என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், “பாரத் ராஷ்ட்ரிய சமிதி-யின் தில்லி போராட்டத்தை ஒடுக்கவே ஒன்றிய அரசு அமலாக்கத்துறை மூலம் தன்னை மிரட்டுகிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ள கவிதா, “ஆனால், ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள மக்கள் விரோத அடக்குமுறை ஆட்சியை, அதிகார வெறியர்களை தில்லியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம்” என்றும் சூளுரைத்துள்ளார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்துள்ள எம்எல்சி கவிதா, நாட்டின் 9 மாநிலங்களில் பின்வாசல் வழியாகவே பாஜக நுழைந்திருப்பதாகவும், தெலுங்கா னாவில் அவ்வாறு நுழைய முடியாததால் பழிவாங்கும் நோக்கில் தன்னிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள் ளார். “தான் எவ்விதத் தவறும் செய்ய வில்லை என்பதால், விசாரணையைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.