தஞ்சாவூர், ஜூலை 18- கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி ஜூலை 25 அன்று டெல்டா மாவட்டங்களில் பெருந்திரள் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் திங்கள்கிழமை தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது: நடப்பாண்டு டெல்டா மாவட்டங் களில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன்.12 இல் திறக்கப்பட்டது. பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது நீர்மட்டம் 103 அடி யாக இருந்தது. தற்போது ஒரு மாதம் கடந்த பின்பு 75 அடிக்கு கீழ் அணை யின் நீர்மட்டம் சரிந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குத்தான் மேட்டூர் அணை யில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும். இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகு படி செய்த பயிர்களுக்கு போதிய தண் ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிகளுக்கு முழுமை யாக தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் சுமார் 115 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தற்போது மேட்டூர் அணை திறக்கப் பட்டு 35 நாட்களில் நீர்வரத்து வெறும் 200 கனஅடிக்குள்தான் உள்ளது. கர்நாட கத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்கியிருந்தாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.9 டிஎம்சி தண்ணீர்தான் வந்துள்ளது. ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரையும் வழங்காமல் உள்ளனர். டெல்டாவில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற, மாதவாரியாக கர்நாடக மாநிலம் கொடுக்க வேண்டிய தண்ணீ ரைக் கொடுத்தால்தான் காவிரி டெல்டா வின் சாகுபடியை பாதுகாக்க முடியும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொடுக்க வேண்டிய 122.57 டிஎம்சி தண்ணீர் மிக முக்கிய மானது. எனவே டெல்டா மாவட்ட குறுவை சாகுபடியைப் பாதுகாக்க உட னடியாக கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்க அம்மாநிலம் முன் வர வேண்டும். காவிரி நதிநீர் ஆணையமும், ஒன்றிய அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித் தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜூலை 25 (செவ்வாய்க் கிழமை) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரி யலூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் வட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.