புதுதில்லி, அக்.11- இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயர் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் எனப்படும் உதய் உமேஷ் லலித், நவம்பர் 8-ஆம் தேதியுடன் பதவி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி இடத்திற்கு டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி யாக பொறுப்பு வகித்த என்.வி.ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்றார். 74 நாட்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலையில், யு.யு.லலித் தலைமை நீதிபதியாக பதவி யேற்றுக் கொண்டார். இதன்படி நவம்பர் 8-ஆம் தேதி யுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. பதவி ஓய்வுபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்ன தாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை, நடப்பு தலைமை நீதிபதி பரிந்துரை செய்ய வேண்டும். அது மட்டுமன்றி, இந்த ஒரு மாத காலத்தில் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் நியமனங்கள் எதையும் நடப்பு தலைமை நீதிபதி பரிந்துரை செய்யக் கூடாது. இது நீண்டகால மாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது.
ஆனால், தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித், பதவி ஓய்வுபெறுவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு, தனது முன்மொழிவை கொலீஜியம் அமைப்பின் மற்ற நீதி பதிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பியது சர்ச்சை யை ஏற்படுத்தியது. அத்துடன், ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி நினைவூட்டும் வரை, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந் துரை செய்யவில்லை.
இந்தப் பின்னணியிலேயே, ஒருவழியாக, உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக, உச்ச நீதிமன்றத்தில் தற்போது தனக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை தலைமை நீதிபதி யு.யு. லலித் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பான கடி தத்தை செவ்வாயன்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பியுள்ளார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நிய மிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற் போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் பதவி ஓய்வுபெறும் நவம்பர் 8-ஆம் தேதிக்கு அடுத்த நாள் நவம்பர் 9-ஆம் தேதி நாட்டின் 50-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.
தந்தை வழியில் தலைமை நீதிபதியான தனயன்
நாட்டின் 50-ஆவது நீதிபதியாக பதவி யேற்க உள்ள டி.ஒய். சந்திரசூட் 1959- ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்த வர். இவரது முழுப்பெயர் தனஞ்ஜெயா யஷ்வந்த் சந்திரசூட் என்பதாகும். சந்திர சூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட் எனப்படும் யஷ்வந்த் விஷ்ணு சந்திர சூட். இவரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். அத்துடன் நீண்டகாலத்திற்கு (7 ஆண்டுகள் 139 நாட்கள்) தலைமை நீதிபதி பதவி வகித்த வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். சந்திரசூட்டின் தாயார் பிரபா இசைக் கலைஞர்.
சட்டத்தில் முனைவர் பட்டம்
மும்பையில் உள்ள கதிட்ரல் ஜான் கோனன் பள்ளியிலும், தில்லியில் செயிண்ட் கொலும்பா பள்ளியிலும் படித்த டி.ஒய். சந்திரசூட், தில்லி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்திலும், கணி தத்திலும் பட்டப் படிப்பை முடித்து, 1982-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பல்க லைக் கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1983-ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முது கலை பட்டம் பெற்றார். அப்போது, ஜோசப் எச்.பீலே பரிசை வென்ற அவர், 1986- ஆம் ஆண்டு சட்டப்படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.
அமெரிக்காவில் வழக்கறிஞர் பணி
தில்லியில் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே ஜூனியர் வழக்கறி ஞராக பயிற்சி பெற ஆரம்பித்திருந்த சந்திரசூட், ஹார்வர்ட் பல்கலைக்கழ கத்தில் சட்டம் பெற்ற பிறகு அமெரிக்கா வின் நியூயார்க் நகரத்தில் சல்லிவன் மற்றும் க்ரோம்வெலில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
இந்தியா திரும்பிய பிறகு உச்சநீதி மன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணியாற்றத் துவங் கிய சந்திரசூட், 1998-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞராக நியமிக்கப்பட்டார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப் பட்ட நிலையில், அதிலும் திறம்பட பணி யாற்றினார். பல்வேறு நாடுகளின் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சட்ட வல்லுநராக சிறப்பு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
2000-ஆவது ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்ட சந்திரசூட், 2013- ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட் டார். அதைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல்- உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளையும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும் பரிந்துரை செய்யும்- உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உறுப் பினர் ஆனார். இந்நிலையிலேயே, தற்போது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்ளும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டு களுக்கு மேலாக இப்பதவியை வகிப்பார்.