புதுதில்லி, ஜூலை 11- காவிரி மேலாண்மை ஆணை யத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணை யத்தின் அடுத்த கூட்டத்தில் மேக தாது அணையின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு ஒரு மனுவை தாக்கல் செய்தி ருந்தது. மேகதாது அணைக்கு எதி ராக தமிழ்நாடு அரசு சார்பில் ஏற் கெனவே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அந்த விசா ரணை நிலுவையில் இருக்கக் கூடிய சூழ்நிலையில் இந்த விவ காரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் 17 மற்றும் 23-ஆம் தேதிகளிலும் அதைத்தொடர்ந்து ஜூலை 6-ம் தேதியும் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட் டன. அடுத்த தேதி இதுவரை அறி விக்கப்படவில்லை. இந்நிலையில் விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் திங்க ளன்று மீண்டும் கூடிய நிலையில்; தமிழக அரசு சார்பில் வழக்கறி ஞர் ஆஜராகி, மேகதாது தொடர் பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; அடுத்த கூட் டம் கூட இருக்கும் சூழ்நிலையில் அவசரமாக இந்த வழக்கை விசா ரிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது விவகா ரம் குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வ தாக உச்சநீதிமன்றம் அறிவித்துள் ளது. வழக்கை விசாரிக்கக் கூடாது என கர்நாடகா தரப்பு வைத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன் றம் நிராகரித்துள்ளது.