states

img

ஒன்றிய பாஜக அரசின் புறக்கணிப்பைக் கண்டித்து கர்நாடகாவும் போராட்டம்

புதுதில்லி, பிப். 4- பொருளாதாரத்தில் நெருக்கடி கொடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.  ஒன்றிய அரசின் அலட்சியத்தை கண்டித்து வரும் 7ஆம் தேதி தில்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடத்தப்படும். ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண்டித்து தில்லியில் கேரளா நடத்தும் போராட்டத் திற்கு காங்கிரஸின் கேரள தலைமை முகம் சுளிக்கும் நேரத்தில் கர்நாடகா வில் உள்ள காங்கிரஸ் அரசு போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் கர்நாடகா வுக்கு எதுவும் இல்லை என்றும், வறட்சி நிவாரணம் கூட நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  முதல் வர் சித்தராமையா கூறினார். ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்து  வருவதால் கர்நாடகாவின் கடன் சுமை  அதிகரித்து வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.  ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு ஒன்றிய பட்ஜெட்டிலும் கர்நாடகா வுக்கான ஒதுக்கீட்டில் ரூ.7,000 கோடி முதல் 10,000 கோடி வரை குறைக்கப் பட்டுள்ளது. 15ஆவது நிதி ஆணையம் மாநிலத்திற்கான வரி விகிதத்தை 3.64 சதவிகிதமாகக் குறைத்தது. இதன் மூலம் 62,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிவக்குமார் கூறினார். தில்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் துணை  முதல்வர் கூறினார்.

தொடரும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

கேரளத்தை புறக்கணிப்பது மற்றும் துரோகத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி தில்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பே அறி விக்கப்பட்டது. கேரளத்தின் போராட்டத் தை ஒன்றிணைந்து நடத்த எதிர்க்கட்சி தலைமைக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார், ஆனால் மாநில காங்கி ரஸ் தலைமை அதற்குத் தயாராகஇல்லை. மாநில அரசுகளை நசுக்கும் ஒன்றிய  அரசையும், பாஜகவையும் கண்டித்து  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியி னர் தில்லியில் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக திரிணா முல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வேலை உறுதித் திட்டத்தில் தொழிலா ளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போரா ட்டமும் நடத்தினார் மம்தா பானர்ஜி.