ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி விரக்தி
புதுதில்லி, ஜூன் 30 - “பிரதமரே பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போது, 22-ஆவது சட்ட ஆணையம் முஸ்லிம்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பது வீண்” என்று ஜம்மியத் உலமா-இ-ஹிந்தின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியுள்ளார். மேலும், அன்றாட வாழ்வில் நம்பிக்கையை மட்டுமே உயிர்ப்புடன் வைத்திருப்போம் என்றும் விரக்தி யுடன் குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேச பாஜக தொண்டர் கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டி யது அவசியம்” என்றும், “ஒரே குடும்பத் தில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் வெவ்வேறு சட்டம் என்றால் அந்த குடும் பத்தை நடத்த முடியாது. அதேபோல் இரண்டு சட்டங்களின் கீழ் நாடு இயங்க முடியாது” என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, 22-ஆவது சட்ட ஆணையத்தைச் சந்தித்து தங் களின் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்தது. இந்நிலையில், ஜம்மியத் உலமா- இ- ஹிந்தின் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரி யத்தின் உறுப்பினருமான மவுலானா அர்ஷத் மதானி பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:
“இப்போது முஸ்லிம்களின் மத உரிமைகள் பறிக்கப்படும் என்று பிரதமர் வெளிப்படையாக கூறியுள்ள தால் யாரால் என்ன செய்ய முடியும்?. சட்ட ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்று எங்களுக்கு தெரியும். எத்தனை ஆயிரம் பிரதிநிதிகள் அல் லது கோரிக்கைகளை அனுப்பினாலும் அது நாம் சொல்வதன் அடிப்படையில் இருக்காது. அது அரசின் கருத்தையே கணக்கில் எடுத்துக் கொள்ளும். இப்போது பிரதமரும் அதனை (பொது சிவில் சட்டம்) ஆதரிக்கிறார், என்பதால் சட்ட ஆணையம் எங்கள் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பது மிக அதிகம். இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் என்ன செய்ய முடியும். யார் என்ன செய்ய முடியும்?. சாலைகளில் இறங்கி போராட வேண்டாம் என்று முஸ்லிம் களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துக்களை கூறலாம். பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் எப்படியும் நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எதை யெல்லாம் இழக்க முடியும்? எங்கள் மசூதி போய்விட்டது, நாம் என்ன செய்ய முடியும். கடவுள் விரும்பி னால் நாம் அன்றாட வாழ்வில் நம்பிக்கையை மட்டுமே உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.” இவ்வாறு மதானி கூறியுள்ளார்.