states

img

இஸ்ரோ உளவு சதி வழக்கு: குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து

புதுதில்லி, டிச. 4- இஸ்ரோவில் உளவு பார்த்ததாக விஞ்ஞானி நம்பிநாராயணனை சிக்க வைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத் யூஸ், குஜராத் முன்னாள் ஏடிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், முன்னாள் ஐ.பி துணை இயக்குநர் பி.எஸ் ஜெயபிரகாஷ், முன்னாள் காவல் அதிகாரிகள் எஸ். விஜயன், தம்பி எஸ்.துர்கா ஆகியோ ருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலை மையிலான அமர்வு ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் கண்டறிதல்க ளின் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை மீண்டும் உயர்நீதிமன்றம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் மனுக்களை நான்கு வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்ப ளிக்க வேண்டும்.

ஐந்து வாரங்கள் கைது நடவடிக்கை கூடாது எனவும் உத்தர வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2018 இல் சிபி மேத்யூஸ் மற்றும் பிறருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2018 செப்டம்பரில், இஸ்ரோ உளவு வழக்கு புனையப்பட்டது என்றும் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நம்பிநாராயணனை சிக்க வைக்க சதி செய்தவர்களை கண்டுபிடிக்க டி.கே.ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. ஜெயின் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ நடவடிக்கை எடுத்ததை அடுத்து, சிபி மேத்யூஸ் மற்றும் பலர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினர். உளவு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புல னாய்வுக் குழுவுக்கு சிபி மேத்யூஸ் தலைமை தாங்கினார். அப்போது உள வுத்துறையின் துணை இயக்குநராக இருந்தவர் ஆர்.பி.ஸ்ரீகுமார்.