இந்திய ராணுவத்தில் 1,15,000 ராணுவ வீரர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், நவீன ஆயுதங்கள், தளவாடங்களுக்கு பற்றாக்குறை உள்ளது. ராணுவம் தன்னை எப்படியாவது நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் உள்ளது. ஆனால் மோடியின் அரசுக்கு போதிய நிதி அளிக்க விருப்பமில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒதுக்கப்படும் பாதுகாப்பு ஒதுக்கீட்டில், பெரும் பகுதி ஊதியம், படிகள்,ஓய்வூதியச் செலவினம் ஆகிய இனங்களுக்கு சென்று விடுகிறது. குறைவான தொகையே எஞ்சுகிறது. இது 1962 க்கு முந்தைய விடுதலை இந்தியாவில் நாட்டின் பாதுகாப்பு ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ளது. ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான தொகை இருப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இது ஒரு கடுமையான பிரச்சனையாக உருவாகியுள்ளது. மோடி அரசின் வெற்று வேட்டு அறிவிப்புகளில் இந்த உண்மைகள் எல்லாம் புதைக்கப்பட்டுவிட்டன.