தில்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. அவர் ஒரு நாட்டுடைய தலைநகரின் முதல்வர். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான எளிய மனிதர் என்பது தில்லியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர் கைது செய்யப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.