states

img

ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகம்

ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும்  நடைமுறை அறிமுகம் '

இந்தியாவில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் மூலம் வாக்க ளிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பீகார் மாநில தேர்தல் ஆணையம். இந்த முன்முயற்சி அம் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதியன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறி முகமாகிறது. மின்னணு முறையில் மொபைல் போன் மூலமாக வாக்காளர்கள் வாக்க ளிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு போன் செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக C-DAC மையமானது ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது. பீகார் மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் போன் சாதனத்தில் இருந்து அதிகபட்சமாக இரண்டு வாக்கா ளர்கள் வாக்குப்பதிவு செய்யலாம். மொபைல் மூலம் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த மொபைல் போனில் இருந்து மட்டுமே வாக்களிக்க முடியும்.   இதுவரை சுமார் பத்தாயிரம் வாக்கா ளர்கள் மின்னணு முறையில் மொபைல் போனை பயன்படுத்தி வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இந்த முறையின் கீழ் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வரையில் வாக்குச்சாவடிக்கு செல்லா மல் மொபைல் போன் மூலம் வாக்க ளிக்க முடியும் என பீகார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் தெரி வித்துள்ளார்.