states

ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியும் முறை இந்தியாவில் அறிமுகம்

புதுதில்லி, ஜூன் 24- ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்ட றியும் முறை இந்தியாவில் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்று நோய் இருப்பதை ஆரம்பக் கட்டத்தி லேயே கண்டறிய முடியும் என்றும் பரி சோதனை முடிவுகள் 99 சதவீதம் உறு திப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள், மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று பூரண குணம் பெற முடியும். நாசிக்கை சேர்ந்த தாடர் (Datar) புற்றுநோய் மரபியல் ஆராய்ச்சி நிறுவனம், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்து டன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது.