சென்னை, ஆக.19- மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த சர்வதேச அலைசறுக்கு ஓபன் தமிழ்நாடு, போட்டி சனிக்கிழமை (ஆக,19) நிறை வடைந்தது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக அமைந்தது. சாரா வகிதா 13.50 புள்ளிகளு டன் மகளிர் பட்டத்தை கைப்பற்றினார். ஜப்பானின் ஷினோ மட்சுடா 13.10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆடவருக்கான இறுதிப் போட்டி கடைசி சில வினாடிகள் வரை இழுபறியாக சென்றது, ஜப்பானைச் சேர்ந்த டென்ஷி இவாமி தனது கடைசி அலை எண்ணிக் கையை 16.30 புள்ளிகளுடன் வென்றார் மற்றும் ஸ்வீடனின் கியான் மார்ட்டின் 14.70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். அரையிறுதிப் போட்டிகளில் வென்ற ஆடவர் மற்றும் பெண்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்றவர்களுக்கு மாநில இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா பரிசுகளை வழங்கினார். மாநில விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே.மேகநாத ரெட்டி, செங்கல் பட்டு ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோ இதில் கலந்துகொண்டனர். இந்திய அலைசறுக்கு விளையாட்டு சம்மேளன தலைவர் அருண் வாசு மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.