புதுதில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 வரை 17 அமர்வு களாக நடத்தப்படவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், 32 மசோதாக் களை நிறைவேற்றி விடுவது என்பது மோடி அரசின் திட்டமாக உள்ளது. ஆனால், 85 நாட்களாக பற்றியெரி யும் மணிப்பூர் விவகாரத்தில், பிர தமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், பிர தமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதால், அமளி ஏற்பட்டு நாடா ளுமன்றம் கடந்த 7 நாட்களாகவே முழுமையாக நடைபெறாமல் முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகி யுள்ளது. ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடி, தனது கார்ப்பரேட் எஜ மானர்களுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையிலும் 7-க்கும் அதிகமான மசோதாக்களை, எந்தவொரு விவா தமும் இல்லாமலும், ஆளும்கட்சி யினர் மட்டுமே கலந்துகொண்ட அரைகுறை விவாதமுமாக நடத்தி முடித்து, நிறைவேற்றியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடரின் 5-ஆம் நாளில் மக்களவை கூடியதும், ‘பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவு சட்டத்திருத்த மசோதா 2023’-ஐ அறிமுகப்படுத்துமாறு ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் நித்யானந்த் ராயை அவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். குரல் வாக் கெடுப்பு மூலம் அந்த மசோதா அவையில் அறிமுகம் செய்யப்பட் டது. இந்த மசோதா, தேசிய மற்றும் மாநில அளவிலான பிறப்பு - இறப்பு பதிவுகளை, எண்ம (டிஜிட்டல்) பதி வாக மேற்கொள்ளவும், கல்வி நிறு வனங்களில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டி யல் தயாரிப்பு, ஆதார் எண், திரு மணப் பதிவு, அரசு வேலைவாய்ப்பு நியமனம், பொதுச் சேவைகள் மற்றும் சமூக பலன்களைப் பெற ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றித ழை பயன்படுத்தவும் இந்த மசோதா அனுமதிக்கிறது.
அன்று மாலையே மக்களவை யில் மேலும் 5 மசோதாக்கள் அறி முகப்படுத்தப்பட்டன. ‘ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023’-ஐ ஒன்றிய இணை யமைச்சர் நித்யானந்த் ராய் அறி முகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரி விக்காத நிலையிலும், குரல் வாக்கெ டுப்பு மூலமாக இந்த மசோதா அறி முகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ‘ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023’-யும் அவர் குரல் வாக்கெடுப்பு மூலம் அவையில் அறிமுகம் செய்தார். ஜம்மு - காஷ்மீர் சட்டப்பே ரவைக்கு, புலம்பெயர்ந்த காஷ்மீரி சமூகத்திலிருந்து ஒரு பெண் உறுப்பினர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதி யிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் என அதிகபட்சம் 2 உறுப்பினர்களை தெரிவு செய்வ தற்கு வழிவகை ஏற்படுத்தும் 15ஏ, 15பி என்ற புதிய பிரிவுகளை மறுசீர மைப்பு சட்டத்தில் சேர்க்க,
ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா வழி செய்கிறது. ‘அரசியல் சாசன (ஜம்மு - காஷ்மீர்) பட்டியல் சாதியினர் அட்ட வணை (எஸ்சி) ஆணை திருத்த மசோதா 2023’-ஐ ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமாரும், ‘அரசியல் சாசன (ஜம்மு-காஷ்மீர்) பழங்குடி யினர் (எஸ்டி) ஆணை திருத்த மசோதா 2023’-ஐ ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் முண்டாவும் அறிமுகம் செய்தனர். இதில், பட்டியல் வகுப்பி னர் ஆணை திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீரில் வால்மீகி சமூகத்தினரை அங்குள்ள சுரா, பங்கி, பால்மீகி, மேதர் சமூகத்துக்கு இணையாக பட்டியல் சாதி அட்டவணையில் சேர்க்க வகை செய்கிறது. இதே போல பழங்குடியினர் ஆணை திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீரின் பழங்குடியினர் சமூகப் பட்டியலை திருத்தம் செய்ய வகை செய்கிறது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா 2023-ஐ, ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிமுகம் செய்தார். ‘சுரங்கங்கள் மற்றும் கனி மங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் திறன் குறித்து எந்த வித ஆட்சேபமும் தெரிவிக்க முடி யாது’ என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப் பட்ட பிறப்பு - இறப்புச் சான்றித ழையே அனைத்துப் பயன் பாட்டிற்கும் ஒரே ஆவணமாக பயன்படுத்திக் கொள்வதற்கான மசோதா, புதிதாக சில சாதிப்பிரிவு களை, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் சேர்த்தல், இடம்பெயர் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் ஆகிய வற்றுக்கு இடையே மிகத் தந்திர மாக, ஏற்கெனவே அறிமுகம் செய்யப் பட்டிருந்த ‘வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023’ மீது சிறு விவாதத்தை மட்டுமே நடத்திய மோடி அரசு, அந்த மசோதாவை மக்க ளவையில் நிறைவேற்றியது. எல்லையோர வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பாது காக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப் பட்டு இருக்கும் வனங்களை கார்ப்பரேட் முதலாளிகளின் வணிக நடவடிக்கைகளுக்கு திறந்து விடு வதுடன், மிசோரம், மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் இருக்கும் பழங்குடியினரை நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு வழிசெய்வதே இந்த மசோதா ஆகும். எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டிலிருந்து 100 கி.மீ. தூரத்திற்கான காடுகள் பாது காக்கப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப் பாடுகள் அகற்றப்பட்டு, வனங்கள் அழிக்கப்பட உள்ளன. கட்டு மானங்கள் வரப்போகின்றன. இப்படி யொரு ஆபத்தான மசோதாவை விரி வான விவாதம் ஏதுமின்றி மோடி அரசு சட்டமாக்கியுள்ளது.
இதேபோல வியாழக்கிழமை யன்றும் எதிர்க்கட்சிகளின் கூச்சல்களுக்கு இடையே 2 மசோ தாக்களுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. நாட்டில் தொழில் புரிவதை எளிமையாக்குகிறோம் என்ற பெயரில் ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா, நடைமுறையில் இல்லாத 76 சட்டவிதிகளை நீக்கும் மசோதா ஆகியவற்றை குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. அந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி யைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் மட்டுமே பேசினர். எதிர்க்கட்சி எம்.பி. க்கள் விவாதத்தில் கலந்துகொள்ள வில்லை. கனிமவளக் சுரண்டலை தாராளமயமாக்கும் வகையில், கடல்சார் பகுதிகள் கனிம சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற் கான மசோதாவும் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப் படத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை யும், படத் தயாரிப்பு செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் விதிப்ப துடன், திரைப்படங்களுக்கு வயது வாரியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு வகை செய்யும் ஒளிப்பதிவு திருத்த மசோதாவை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச முயன்றார். அவரைப் பேச விடாமல் ஆளுங்கட்சி எம்.பி. க்கள் கூச்சலிடவே எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதை யடுத்து, ஒளிப்பதிவு திருத்த மசோதாவையும் குரல் வாக்கெடுப்பு மூலமாக மோடி அரசு நிறை வேற்றிக் கொண்டது.