புதுதில்லி,பிப்.6- நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரி கள் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத் தில் ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச் சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார். அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருகிறது. நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில், 40 மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் ஆர்வத்துடன் வளர்ந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுகின்றன . 157 கல்லூரிகளில் 70 கல்லூரிகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இந்த புதிய கல்லூரிகள் 16 மாநிலங்களைச் சேர்ந்தவை. இதுவரை எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகளிலேயே இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.