பனாஜி, ஜன.22- கடந்த 2017-ஆம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்த முள்ள 40 தொகுதிகளில், பாஜக 13 தொகுதிகளிலேயே வெற்றிபெற்றது. எனினும் குதிரை பேரம் மூலம் பிற கட்சி களை வளைத்து, பாஜக தலைவர் மனோ கர் பாரிக்கர் ஆட்சியைக் கைப்பற்றி னார். துரதிர்ஷ்டவசமாக 2 ஆண்டுகளில்- கடந்த 2019-ஆம் ஆண்டு அவர் இறந்து போனார். பிரமோந்த் சாவந்த் புதிய முதல் வராக்கப்பட்டார். அவர் 2022 வரை பதவிக் காலத்தை நிறைவுசெய்தார். இதனிடையே, கோவா சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 14 ஆண்டு தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத் பல் பாரிக்கர் பாஜகவில் வாய்ப்பு கேட்டி ருந்தார். தனது தந்தையின் தொகுதி யான பனாஜியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போதைய எம்எல்ஏ அடா னாசியோ மான்ஸேரேட்டிற்கே, பனாஜி தொகுதியை ஒதுக்கிய பாஜக, உத்பல் பாரிக்கரை ஏமாற்றியது. இதையடுத்து, உத்பல் பாரிக்கர் பாஜகவிலிருந்து விலகியிருப்பதுடன், பனாஜி தொகுதியில் தனித்து போட்டி யிடுவதாகவும் அறிவித்துள்ளார். “எனக்கு பனாஜி தொகுதி மக்க ளின் ஆதரவுக்கு இருப்பதை எடுத்துக் கூறி கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்துவிட்டேன். கடந்த முறைதான் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றால் இந்த முறையும் மறுத்துள்ளனர். ஆனால் எனக்கு மறுத்துவிட்டு, சந் தர்ப்பவாத அரசியல்வாதியாகச் செயல்பட்டு வெற்றிபெற்ற பின் கட்சி தாவியவருக்கு பனாஜி தொகுதி ஒதுக் கப்பட்டுள்ளது. எனவே நான் கட்சியிலி ருந்து விலகியுள்ளேன். எனது அரசியல் எதிர்காலத்தை பனாஜி மக்கள் தீர்மா னிப்பார்கள்” என்று உத்பல் பாரிக் கூறி யுள்ளார்.