புதுதில்லி, மே 27 - உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ‘சர்வ தேச புக்கர் பரிசு’ (International Booker Prize) கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு மொழிபெயர்க்கப்பட்ட புனைகதைக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இது ஆங்கில மொழி புனைகதைகளுக்கான புக்கர் பரி சுடன் இணைந்து நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இந்திய எழுத்தா ளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற இந்தி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘டாம்ப் ஆப் சாண்ட்’ (Tomb of Sand) படைப்புக்குகிடைத்துள்ளது. இந்திய மொழியில் எழுத்தப்பட்ட நூலுக்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைப்பது இதுவே முதல்முறையாகும். அந்தப் பெருமையை, தில்லியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ (64) பெற்றுள்ளார். கணவரை இழந்த 80 வயது பெண் 1947ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது தான் எதிர்கொண்ட மோசமான அனு பவங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசு வதுதான் ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) நாவல் ஆகும்.
இந்த இந்தி நாவலை, ‘டாம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் ராக்வெல் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். அது 2022-ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுப் போட்டிக்கும் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. இதேபோல உலகம் முழுவ திலிருந்தும் 135 நூல்கள் வந்திருந்தன. இதில் போலந்து நோபல் அறிஞர் ஓல்கா டோக்கர்ஜுக், அர்ஜென்டினாவின் க்ளாடியா ஃபினேரியோ, கொரியாவின் போரா சுங் உள்ளிட்டோர் எழுதிய 6 நூல்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகின. அதில், இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ-க்கு பரிசு கிடைத்துள்ளது. பரிசுத் தொகையான 50 ஆயிரம் பவுண்ட் (சுமார் 49 லட்சம்) கீதாஞ்சலி ஸ்ரீ, மொழிபெயர்ப்பாளர் ராக்வெல் ஆகிய இருவருக்கும் சமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது. விருது கிடைத்தது குறித்து கீதாஞ்சலி ஸ்ரீ, ஊடகங்கள் மத்தியில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “புக்கரைப் பற்றி நான் கனவிலும் நினைத்ததில்லை, என்ன ஒரு பெரிய அங்கீ காரம். நான் ஆச்சரியப்படுகிறேன், மகிழ்ச்சி யடைகிறேன், பெருமைப்படுகிறேன், தாழ்மையுடன் இருக்கிறேன். இந்த விருது, இந்தி உள்ளிட்ட பிற தெற்காசிய மொழி களின் வளமான இலக்கிய பாரம்பரியத்தை உலகம் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள் ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா வைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய ‘தி பிராமிஸ்’ என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது.