states

கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய இந்தியன், பரோடா, ஐசிஐசிஐ வங்கிகள்!

புதுதில்லி, நவ.12-  ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் ஒவ்  வொரு முறையும், பொதுத்துறை மற்  றும் தனியார் துறையைச் சேர்ந்த  வங்கிகள் ரெப்போவுடன் தொடர்பு டைய (Repo Linked Lending Rate  -RLLR) கடன்களுக்கான வட்டியை  உயர்த்துவது வழக்கம். அந்த வகை யில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலா கவே வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் நவம்பர் முதல் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா,  ஐசிஐசிஐ வங்கிகளும் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.  பொதுத்துறையைச் சேர்ந்த  பரோடா வங்கி (BOB) எம்சிஎல்ஆர்  (Marginal Cost of Funds Based  Landing Rate - MCLR) வகை கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

இதன்படி, பரோடா வங்கியில்  ஓராண்டு பருவகாலம் கொண்ட கடன்  களுக்கான வட்டி விகிதம் 0.10 சத விகிதம் உயர்த்தப்பட்டு 8.05 சதவிகி தமாகவும், ஒரு நாள் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.10 சதவிகிதத்திலி ருந்து 7.25 சதவிகிதமாகவும் உயர்ந்  துள்ளது. ஒன்று, மூன்று, ஆறு மாதங்  களுக்கான கடன் வட்டி விகிதங்கள், முறையே 7.70 சதவிகிதம், 7.75 சத விகிதம், 7.90 சதவிகிதம் என உயர்ந்துள்ளன. இதேபோல இந்தியன் வங்கியும், எம்சிஎல்ஆர் அடிப்படையில் வழங்  கியுள்ள கடன்களுக்கான வட்டி விகி தத்தை 0.35 சதவிகிதம் வரை உயர்த்தி யுள்ளது. இதனால் இந்தியன் வங்கி யின் குறைந்தபட்ச பருவகாலக் கடன்  களுக்கான வட்டி விகிதம் 7.40 சதவிகி தமாக அதிகரித்துள்ளது. ஓராண்டுக் கான கடன் வட்டி விகிதம் 8.10 சத விகிதமாக உயர்ந்துள்ளது.  தனியாருக்குச் சொந்தமான ஐசி ஐசிஐ வங்கியும் தனது எம்சிஎல்ஆர் வகைக் கடன்களுக்கான வட்டி விகி தங்களை 0.20 சதவிகிதம் உயர்த்தி இருப்பதால், அந்த வங்கியின் ஓராண்டுக்கான கடன் வட்டி 8.30 சத விகிதமாகவும், 6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.