states

img

நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன மாட்டுச் சிறுநீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்றதல்ல!

ரேபரேலி, ஏப். 12 - மனிதர்களின் அனைத்து விதமான நோய் களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்றால் அது பசுவின் சிறுநீர்தான்; அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின்  முக்கியக் குற்றவாளியும், சாமியாரிணியும், தற்போது பாஜக எம்.பி.யாக இருப்பவரு மான பிரக்யா சிங் தாக்குர், முன்பொரு முறை பேசுகையில், “தான் சிறையில் இருந்தபோது தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கோமியம் அருந்தியதால் எனது புற்றுநோய் குணமானது” என்றும் மருத்துவ உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவர்தான் அப்படியென்றால், குஜராத்  மாநிலத்திலுள்ள டாப்பி மாவட்ட நீதிமன்ற த்தின் நீதிபதி ஒருவரும், அண்மையில், பசுக் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த போது, “பசு நமக்கெல்லாம் ஒரு தாயை போன்றது. அதன் ரத்தம் பூமியில் சிந்தக் கூடாது. பசுவின் கோமியம் மனிதர்களுக்கு வரும் நோயை போக்குகிறது” என்று தன்பங்கிற்கு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பின்னணியில்தான், “மாட்டுச் சிறுநீரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரி யாக்கள் இருப்பதால், அது மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்றதல்ல” என்று, இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) ஆய்வில் தெரியவந்துள்ளது.

6 மாதங்களாக நடந்த ஆராய்ச்சி

‘இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சி லின்’ (Indian Council of Agricultural Re search - ICAR) கீழ் வரும், இந்தியாவின் முதன்மையான விலங்கு ஆராய்ச்சி அமைப்பான ‘இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்’ (Indian Veterinary Research Institute - IVRI) தனது நிறுவனத்தின் தொற்று நோயியல் துறைத் தலைவர் போஜ்ராஜ் சிங் தலைமையில் அண்மையில் ஆய்வு ஒன்றை  நடத்தியுள்ளது. அவருடன், 3 பிஎச்டி (PhD)மாணவர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 6 மாதங்களாக 70-க்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள், மனிதர்களின் சிறுநீரை கொண்டு அவர்கள் ஆராய்ச்சி நடத்தியுள்ள னர். இந்த ஆராய்ச்சியில்தான், மத நம்பி க்கையாளர்களால், ‘கோமியம்’ எனப்படும்  பசுவின் சிறுநீர், மனிதர்கள் குடிப்பதற்கு  உகந்தது அல்ல!” என்று கண்டறியப் பட்டுள்ளது.  “பசுவின் சிறுநீரில் 14 வகையான தீங்கு  விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன; குறிப்பாகக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் இ.  கோலை எனப்படும் எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) உள்ளிட்ட கடுமையான பாக்டீரியாக்கள், பசுவின் சிறுநீரில் கண்ட றியப்பட்டுள்ளன. அவை மனித உடலுக்குள்  சென்றால் வயிறு மற்றும் குடல்களில் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று அறிக்கை அளிக்கப் பட்டு உள்னது.

எருமையின் சிறுநீரில்  குறைவான ஆபத்து

இந்த அறிக்கையில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது என்னவென்றால், பசுவின் சிறுநீருக்கு, எருமையின் சிறுநீர் பரவாயில்லை. அது பசுக்களை விட மிக குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்துகிறது; எருமையின் சிறுநீரில் எஸ் எபிடெர்மிடிஸ் மற்றும் ஈ ராபோன்டிசி (S Epidermidis and E Rhapontici) போன்ற குறைந்த வீரியம் கொண்ட பாக்டீரியாக்களே இருக்கின்றன என்பதாகும். இந்த ஆய்வின் முழு விவரங்களும் ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான ‘ரிசர்ச்கேட்’டில் (ResearchGate) வெளி யிடப்பட்டுள்ளன.  தொற்றுநோயியல் துறையின் தலைவர்  போஜ்ராஜ் சிங் விரிவான பேட்டி ஒன்றை யும் அளித்துள்ளார்.  அதில், “நமது ஊரில் இருக்கும் பால் பண்ணைகளில் இருந்து சாஹிவால், தார்பார்கர் மற்றும் விந்தவானி ஆகிய மூன்று  வகையான ஆரோக்கியமான மாடுகளின் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்தோம். அதே போல எருமைகள் சிறுநீர் மாதிரிகளைச் சேக ரித்தோம். இவ்வாறு பசு, எருமைகளிடம் இருந்து மொத்தம் 73 சிறுநீர் மாதிரிகளை எடுத்து நாங்கள் சோதனை செய்தோம்.  இந்த ஆய்வை நாங்கள் ஜூன் மற்றும் நவம்பர் 2022 காலகட்டத்தில் செய்தோம். அதன்முடிவில், எந்தவொரு சூழலிலும் மாடுகளின் சிறுநீரை மனித நுகர்வுக்குப் பரிந்துரைக்க முடியாது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.  நுகர்வுக்கு உகந்தது அல்ல என்பதோடு மட்டுமல்லாமல் இதை  அருந்தினால் மனிதர்களுக்கு பல மோச மான நோய்களும் ஏற்படும் என்பதையும், சிறுநீர் மாதிரிகளில் கணிசமான விகிதத்தில் நோயை ஏற்படுத்தும் 14 விதமான பாக்டீ ரியாக்கள் உள்ளதை நாங்கள் கண்டறிந் தோம். 

மனிதர்கள் குடிக்க பரிந்துரைக்கவே முடியாது

பசுவுடன் ஒப்பிடுகையில் எருமையின் சிறுநீரில் ஆன்டி பாக்டீரியாக்கள் இருக் கின்றன. எருமையின் சிறுநீரில் எஸ் எபிடெர் மிடிஸ் மற்றும் ஈ ராபோன்டிசி (S Epider midis and E Rhapontici) போன்றவை இருப்பதால் அது சற்று குறைவான வீரியம் கொண்டதாக இருக்கிறது. எனினும், மாட்டுச் சிறுநீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்று பொதுமைப் படுத்த முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்தி லும் சிறுநீரை மனிதன் சாப்பிட பரிந்து ரைக்க முடியாது. சில தனிநபர்களின் சிறுநீர்,  பாலினம் மற்றும் இனப்பெருக்க இனங் களைப் பொருட்படுத்தாமல், தேர்ந்தெடுக்கப் பட்ட பாக்டீரியாக்களுக்கு தடையாக இருக்க லாம். ஆனால் மாட்டுச் சிறுநீர் ‘பாக்டீரியா எதிர்ப்பு’ என்று பொதுவான நம்பிக்கையை பொதுமைப்படுத்த முடியாது.

காய்ச்சிக் குடித்தால் நன்மையா?

சிலர் காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இல்லை என்று தர்க்கத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், இதுகுறித்த ஆய்வை இப்போதுதான் நாங்கள் செய்து வருகிறோம்” என்று போஜ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐவிஆர்ஐ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.எஸ். சவுகான், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் போஜ்ராஜ் சிங்  குழுவின் ஆய்வை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். “நான் 25 ஆண்டுகளாகப் பசுவின் சிறுநீரை ஆராய்ச்சி செய்து வருகிறேன், காய்ச்சி  வடிகட்டிய மாட்டுச் சிறுநீர், மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் கொரோ னாவுக்கு எதிராக உதவுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ஆராய்ச்சி, காய்ச்சி வடிகட்டிய சிறுநீர் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்யவில்லை. உண்மையில் அதைத்தான் மக்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆர்.எஸ். சவுகான் இவ்வாறு கூறினா லும், இப்போதுவரை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணை யத்தின் (FSSAI) முத்திரையே இல்லாமல் பசுவின் சிறுநீர் இந்தியச் சந்தையில் பரவ லாக விற்கப்படுகிறது. அவை காய்ச்சி விற்கப்படுகிறதா, அல்லது வெறுமனே அப்படியே விற்கப்படுகிறதா? என்ற விவ ரங்கள் எதுவும் தெரியாமல்தான் மக்கள் மாட்டுச் சிறுநீரை ‘கோமியம்’ என்று வாங்கி குடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.