states

img

லடாக் எல்லைப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா - சீனா சம்மதம்

புதுதில்லி, ஏப்.26 - லடாக் எல்லைப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் போர்  பதற்றம் எழுந்தது. இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சு வார்த்தைகள் மூலம், எல்லையில் போர்  பதற்றம் தணிந்துள்ளது. எனினும் லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த சூழலில் கடந்த ஏப்.23 அன்று இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 18-வது சுற்று பேச்சுவார்த்தை லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்திய தரப்பில்  லெப்டினென்ட் ஜெனரல் ரஷிம் பாலியும், அவருக்கு இணையான சீன ராணுவ உயரதி காரியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்  தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “இருதரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. லடாக் எல்லைப் பிரச்சனையில் இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன” என்றார். இந்திய வெளியுறவுத் துறை வெளி யிட்ட அறிக்கையில், “லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனை களுக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும்,  சீனாவும் சம்மதித்துள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு தலைநகர் தில்லியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்பூ பங்கேற்கிறார். அப்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்ச னை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.