புதுதில்லி, ஆக.30-
அருணாசலப்பிரதேசம் முழுவதை யும் மற்றும் அக்சாய் சின் பிராந்தியத்தை யும் சீனாவுடன் இணைத்து, சீன அர சாங்கம் பூகோள வரைபடம் வெளி யிட்டிருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது.
சீன அரசாங்கத்தின் சார்பில் சீனா வின் வரைபடம் திங்களன்று இரவு வெளியிடப்பட்டது.இதன்பின், இந்திய அரசின் அயல்துறை விவகாரங்கள் அமைச்சகம் செவ்வாயன்று மாலை அதற்குக் “கடும் எதிர்ப்பு” தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையில், இந்த நடவ டிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையே எல்லை சம்பந்தமாக நடை பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இந்திய அயல் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், என்டிடிவி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியப் பகுதிகளை சீனாவுக்குச் சொந்தமானது என்று கூறுவது சீனாவின் “பழைய பழக்கம்” என்றார். மேலும், “அக்சாய் சின் மற்றும் அருணாசலப் பிரதேசம் இந்தி யாவின் பகுதிகளாகும். நம்முடைய எல்லைகள் எவை என்பதில் அரசாங்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது. இவ்வாறு அபத்தமாகக் கோருவதன் மூலம் மற்றவர்களின் எல்லைகள் உங்களுடையதாக மாறிவிடாது,” என்று தெரிவித்தார். (ந.நி.)