states

img

தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும்!

புதுதில்லி, பிப்.26- உக்ரைன் மீதான ராணுவத் தாக்கு தலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினா் இந்தி ரேஷ் குமார் அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது: “எந்த பிரச்சனைக்கும் போர் தீர்வா காது. மாறாக மனிதகுலத்துக்குதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. அந்த வகையில், போரைத் தீவிரப்படுத்தும் சூழல் தவிர்க்கப்பட வேண்டும்.  இந்தியா உள்பட உலக நாடு களின் அரசுகள், அரசியல் தலைவர் கள், தூதர்கள், பாதுகாப்பு நிபுணர் கள், விஞ்ஞானிகள், பொது சமூகத்தி னர் என அனைவரும் கைகோர்த்து, உக்ரைன் மீதான ராணுவத் தாக்கு தலை உடனடியாக நிறுத்த ரஷ்ய ஜனா திபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் தர வேண்டும்.  பேச்சுவார்த்தை மூலம் பிரச்ச னைக்கு தீர்வு காணுமாறு அவரை வலி யுறுத்த வேண்டும். அமைதி, நல்லி ணக்கம், சகோதரத்துவ பாதைக்கு திரும்புமாறு ரஷ்யாவுக்கு முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அறி வுரை வழங்க வேண்டும். இவ்வாறு இந்திரேஷ் குமார் கூறி யுள்ளார்.