states

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் “இந்தியா”வுக்கு பதில் இனி “பாரத்”

புதுதில்லி, அக். 25- சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் “இந்தியா”வுக்கு பதில் இனி “பாரத்”  என மாற்ற என்சிஇஆர்டி மூலம் மோடி அரசு முயற்சியில் இறங்கியுள்ளது. தில்லியில் அண்மையில் ஜி-20 மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உலகத் தலை வர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பார தத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து,  பிரதமர் வெளிநாட்டுப் பயண அறிவிப்பிலும், ஜி20 மாநாட்டில் பிரதமர் இருக்கை யிலும் ‘பாரத்’ என்றே குறிப்பிடப் பட்டது இது விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “இந்தியா பாஜக-வின் தனிப்பட்ட சொத்தல்ல” எனக் கடும் கண்டனம் தெரிவித்தன.  மேலும், நாட்டின் பெயரை `பாரதம்’ என மாற்ற பாஜக முயல்வ தாகவும் குற்றம்சாட்டினர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 3 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபி எஸ்இ தேசிய பாடத்திட்டத்தில், பள்ளிப் பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருள்கள் ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக அண்மையில் குழு அமைத்தது.  தற்போது இந்தக் குழு புதிய பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில், அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என்று திருத்தம் செய்ய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் வெற்றி 

இது குறித்து ஐஸக் மேலும் கூறுகை யில் “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கெனவே இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறுகிறது. பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாடப் புத்தகங்களில் நமது தோல்வியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முகலாயர்களையும் சுல்தான் களையும் நாம் வெற்றி கொண்ட வர லாறு இடம்பெறவில்லை. எனவே புதிய பாடப் புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிளாசிப் போருக்கு (battle of Plassey - 1757) பிறகுதான் பயன்பா ட்டிற்கு வந்தது. எனவே அக்குழு ஒரு மனதாக “பாரத்” என்ற பெயரை பாடநூலில் பயன்படுத்த பரிந்துரைத்து உள்ளது” என தெரிவித்துள்ளார்.