புதுதில்லி, செப்.27- கடந்த பத்தாண்டுகளில் இந்தி யாவின் பொது கருவுறுதல் விகி தம் 20 சதவிகிதம் குறைந்துள் ளது. அதாவது 15 முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில், ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற் றெடுக்கும் விகிதம் 20 சதவிகி தம் அளவுக்கு குறைத்துள்ளது. மாதிரி பதிவு முறை ( Sample Registration System - SRS) இதுதொடர்பான புள்ளிவிவரங் களை வெளியிட்டுள்ளது. அதில், ஜிஎப்ஆர் எனப்படும் பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம் (General Fertility Rate - GFR), 2008 முதல் 2010 வரை யிலான மூன்று ஆண்டுகளில் 86.1 சதவிகிதமாக இருந்தது. இது 2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் 68.7 சதவிகிதமா கக் குறைந்துள்ளது. இதுவே, நகரப் பகுதிகளில் 20.2 சதவிகிதமும், கிராமப் பகுதி களில் 15.6 சதவிகிதம் என்ற அள வில் கருவுறுதல் விகிதம் குறைந் துள்ளது. திருமண வயது அதிகரிப்பு, பெண்களிடையே அதிக கல்வி யறிவு விகிதம் மற்றும் நவீன கருத்தடை முறைகள் எளிதாகக் கிடைப்பது ஆகியவையே கரு வுறுதல் விகிதம் குறைந்ததற்கு காரணம் என்று பார்க்கப்படுகிறது. கல்வியறிவற்ற மற்றும் கல்வி யறிவு பெற்ற இந்திய பெண் களுக்கு இடையே கருவுறுதல் விகிதத்தில் வேறுபாடு இருப் பதை மாதிரி பதிவு முறை அறிக் கையும் (SRS) தெளிவுபடுத்தி யுள்ளது.
இந்தியாவில் இப்போது 139 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் நவீன கருத் தடை முறைகளைப் பயன்படுத்து கின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் இனப்பெருக்க உரிமைகளை ஆதரிக்கும் உல களாவிய கூட்டாண்மையான குடும்பக் கட்டுப்பாடு (FP2020) அமைப்பு, கடந்த எட்டு ஆண்டு களில் குடும்பக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தனது அறிக்கையில் விவரித்துள் ளது. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முன் னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், கருத்தடை பயன்பாடு இந்தியாவில் 54.5 மில்லியன், அதிகமான திட்டமி டப்படாத கர்ப்பங்கள், 1.8 மில்லி யன் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு கள் மற்றும் மகப்பேறு இறப்பு 23 ஆயிரம் என்ற எண்ணிக்கை யில் தடுக்கப்பட்டுள்ளன. குடும் பக் கட்டுப்பாடு திட்டங்களில் அதி கம் செலவிடும் நாடுகளில் ஒன் றாக இந்தியா தொடர்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 13 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நவீன கருத்தடை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள் ளது. கடந்த ஆண்டில் மட்டும் 121 மில்லியனுக்கும் அதிகமான திட்டமிடப்படாத கர்ப்பங்கள், 21 மில்லியன் பாதுகாப்பற்ற கருக் கலைப்புகள் மற்றும் 1 லட்சத்து, 25 ஆயிரம் மகப்பேறு இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.