புதுதில்லி, மார்ச் 26- இந்தியாவில் 78 சதவீத மக்கள் நிலத்தடி நீரை நம்பியிருப்பதாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று தெரிவித்தார். ஆனால் தண்ணீர் (ஆர்சனிக்) மாசடைவதில் இந்தியா இரண்டா வது இடத்தில் உள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் மாசடைவது அதிகம் (ஆர்சனிக்). தண்ணீர் மாசால் 2.34 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தண்ணீர் மாசை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது அவசியம் என்றார். இந்தநிலையில் நாடாளுமன்ற மக்கள வையில் வெள்ளியன்று கேள்வி நேரத்தின் போது, ஒன்றிய ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிஸ்வேஷ்வர் துடு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மூலம் நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திரு நெல்வேலி, திருப்பூர் வேலூர், கடலூர், பெரம்ப லூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர்மாவட்டங்களில் ப்ளூரைடு அளவு அனுமதிக்கப்பட்டதை விட லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் புளோரைடு அதிகமாக இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் மாவட்டங்களில் ஆர்சனிக் அளவு லிட்டருக்கு 0.01 மில்லி கிராம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.