states

img

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு

புதுதில்லி, ஆக. 21 - மாநிலங்களவை உறுப் பினர்களாக தேர்வு செய்ய ப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட 9 எம்.பி.க்கள் திங்க ளன்று பதவியேற்றனர்.  நாடாளுமன்ற வளாகத் தில் உள்ள மாநிலங்கள வைச் செயலக அறையில் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி யேற்றவர்களில் வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய் சங்கர் (குஜராத்), பாபுபாய் ஜெசங்பாய் தேசாய் (குஜ ராத்), கேஸ்ரிதேவ்சிங் திக்வி ஜய்சிங் ஜாலா (குஜராத்), நாகேந்திர ரே (மேற்கு வங்கம்) ஆகிய 4 பேர் பாஜக சார்பிலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் சமுருல் இஸ்லாம் ஆகிய 5 பேர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும் பதவியேற்றனர். பதவியேற்ற ஒன்பது உறுப்பினர்களில், ஐந்து  பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்  பட்டவர்கள் ஆவர்.