states

தீக்கதிர் விரைவு செய்திகள்

திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பாஜக ஆளும் திரிபுரா மாநி லத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. வங்கதேச எல்லை மட்டுமின்றி தற்போது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதைப்பொருள் கடத்தல் சர்வசாதாரணமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கோவாய் மற்றும்  தாலியா மாவட்டங்களில் இருந்து  ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வியாழனன்று இரவு கோவாய் மாவட்டத்தில் உள்ள தெலியமுராவில் சிமெண்ட் பைகளை ஏற்றிச் சென்ற லாரியை அசாம் ரைபிள்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநர கத்தின் கூட்டுக்குழு தடுத்து நிறுத்தி ரூ.9  கோடி மதிப்புள்ள 90,000 யாபா மாத்திரை களை (மெத்தாம்பேட்டமைன்) பறிமுதல் செய்துள்ளது. அதேபோல தாலியா மாவட் டத்தில் ரோந்து பணியின் போது ரூ.13 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

மாணவர்களின் சைக்கிளில் கூட  குஜராத் மாடல் பிரம்மாண்ட ஊழல்

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய (SEBC) மற்றும் பட்டியலின (SC) மாணவர் களுக்கு சரஸ்வதி சாதன யோஜனா (எஸ்எஸ்ஒய்) என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் என கடந்த 2024ஆம் ஆண்டு அம்மாநில சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த சைக்கிள்கள் விநியோகத்தில் பிரம்மாண்ட ஊழல் நிகழ்ந்துள்ளதாக புகார் வெளியாகி யுள்ளன. எஸ்எஸ்ஒய் திட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிளை 4,444 ரூபாய்க்கு வாங்கியுள்ளது குஜராத் பாஜக அரசு. ஆனால் அதே சைக்கிளை ராஜஸ்தான் அரசு 3,857 ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் ஒரு சைக்கிளுக்கு 500 ரூபாய் அதிகமாக குஜராத் அரசு செலவு செய்துள்ளது. இதன்மூலம் 1.70 லட்சம் சைக்கிள்களுக்கு 8.5 கோடி ரூபாய் அதிகம் கொடுத்து கொள்முதல் செய்து பிரம்மாண்ட ஊழல்  மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சைக்கிள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்ட நிறுவனமும் பாஜகவைச் சேர்ந்தது என செய்திகள் வெளியாகியுள்ளன.