இம்பால், ஆக.20- பிரச்சனைகளை தீர்க்க வேண்டி யவர்களே மணிப்பூரில் தீ மூட்டினார்கள் என்று இம்பால் பேராயர் டொமினிக் லுமோன் வேதனையுடன் கூறினார். பேராயர் மாளிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரியுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், “ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அதன் சொந்த கவலை களும் அச்சங்களும் உள்ளன. இதை யெல்லாம் அரசு பேசித் தீர்க்க வேண்டும். மாறாக ஒன்றிய, மாநில அரசுகளின் அணுகு முறை மோதலை மூட்டியுள்ளது” என்றார் பேராயர். “கலவரத்தில் கத்தோலிக்க திருச் சபைக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிட முடி யாதது. மணிப்பூர் மாநிலத்தில் தேவா லயத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் 60,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக் கின்றனர். தேவாலயங்களுடன் இணைக்க ப்பட்ட பல பள்ளிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டுள் ளது.
இது தவிர நிதி இழப்பு மற்றும் வேலை இழப்பு. தேவாலயத்தின் சொத்துக்கள் 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் இன்னும் திரும்பிக் கூட பார்க்கவில்லை” என்று பேராயர் கூறினார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று யெச்சூரி உறுதியளித்தார். சிபிஎம் திரிபுரா மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, அசாம் மாநில செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், மத்தியக் குழு உறுப்பினர் தேப்லினா ஹேம்ப்ராம் மற்றும் மணிப்பூர் மாநில செயலாளர் சத்ரிமாயும் சாந்தா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். பல்வேறு குடிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் சிபிஎம் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மணிப்பூர் மக்களுக்கு பாஜக துரோகம் இழைத்து விட்டதாக அந்த அமைப்புகள் கருத்து தெரிவித்தன. பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடந்தது. இதற்கு சீத்தாராம் யெச்சூரி, சத்ரிமாயும் சாந்தா, முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகச்சந்திர சிங் ஆகியோர் தலைமை தாங்கினர்.