states

img

தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி பாஜக-வுடன் சேர மாட்டேன்!

லக்னோ, பிப். 25 - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாட்களுக்கு முன்பு,  பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.  ‘’உத்தரப் பிரதேச அரசியலில் மாயா வதியின் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில்லை. பகுஜன் சமாஜ்  கட்சி மக்களிடையே தனது செல் வாக்கை இழந்து விட்டதாக கூறு வது தவறு. அவர்கள் வாக்குகளைப் பெறுவார்கள் என நம்புகிறேன். ஆனால், அது எப்படி வெற்றியாக மாறும் என்பது எனக்கு தெரியவில்லை’’ என்று கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சு  குறித்து, மாயாவதியிடம் கேட்டபோது, ‘’உண்மையை உணர்ந்து கொண்டது அமித்ஷாவின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில் அவ ருக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில், தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் பகுஜன் சமாஜ் பெறவில்லை. உயர்சாதி யினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரும் எங்களுக்கு ஓட்டு போட்டுள் ளனர். 403 தொகுதிகளில் 300-க்கும்  மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற் றும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், பாஜக-வுக்கு பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் வெற்றியைப் பதிவு செய்யலாம்” என்று பதிலளித்திருந்தார். இதையடுத்து, பகுஜன் சமாஜ்  மீதான அமித்ஷாவின் மென்மையான அணுகுமுறையும், மறுபுறத்தில் அமித்ஷாவின் பேச்சை ‘பெருந்தன்மை யானது’ என்று மாயாவதி குறிப்பிட்டதை யும் வைத்து, மாயாவதி பாஜக-வின் டீம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. பாஜக-வுடன் அவர் கூட்டணி சேரப் போவதாகவும் செய்திகள் பரப்பப் பட்டன. இந்நிலையில், தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள மாயாவதி, ‘’நான் யாருடைய ‘பி’ டீமும் இல்லை. தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ நான் பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுக்கு  எதிராக செயல்படும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது’’ என்று அறிவித்துள்ளார்.