states

img

ஆம் ஆத்மியின் மரணம்! - அசுதோஷ், (முன்னாள் ஆம் ஆத்மி கட்சி தலைவர்/ஊடகவியலாளர்)

ஜனவரி 2014ல் நான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பொழுது மிகவும் பெருமை கொண்டேன். ஆனால் அந்த கட்சியில் இன்று நான் இல்லை என்பதில் நிம்மதி அடைகிறேன். அன்று ஆம் ஆத்மி கட்சி ஒரு புரட்சிகர சக்தியாக மதிப்பிடப்பட்டது. அரசியல் தளத்தில் அர சியல் செய்ய அல்ல; மாறாக அந்த அர சியலை மாற்றவே ஆம் ஆத்மி கட்சி உருவான தாக முன்வைக்கப்பட்டது. இன்று இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அத்தகைய கட்சிதானா என்பதை நம்ப கடினமாக உள்ளது. அது உருத்தெரியாமல் சிதைந்துவிட்டது போல தோன்றுகிறது. 2013ஆம் ஆண்டு தில்லி சட்ட மன்ற தேர்தலில் தனது வேட்பாளர்களை சாதி/ மதம்/மொழி/பாலினம்/பிரதேசம் என்பதன் அடிப்படையில் தேர்வு செய்ய மாட்டோம் என அந்த கட்சி அறிவித்தது. நல்ல குணம்/ நாணயம்/ நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதற்கு முன்பு வேட்பாளர்களின் பின்னணி மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. ஒரு சிறு தவறு இருந்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார்.

வக்கிரமாக மாறிய தென்றல்

ஊழலில் மூழ்கியிருந்த இந்திய அரசிய லில் ஒரு புதிய தென்றலாக ஆம் ஆத்மி வந்தது. ராஜ் மோகன் காந்தி/ ஆனந்த் குமார்/  மேதா பட்கர் போன்றவர்கள் 2014ஆம் ஆண்டு  தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிட்ட னர். மதத்தை பற்றியோ அல்லது கடவுளர்கள் பற்றியோ அன்று ஆம் ஆத்மி கட்சி  பேசவில்லை. நலிவடைந்தவர்களுக்காக வும் விளிம்புநிலை மக்களுக்காகவும் கல்வி/  மருத்துவம்/ இலவச மின்சாரம்/சலுகை விலை யில் குடி நீர் என பல நலத்திட்டங்களை அந்த  கட்சி உருவாக்கியது. அரசியல் நிர்வாகத்தில் ஒரு முன்மாதிரியாக இந்த திட்டங்கள் அமைந்தன. ஆனால் இன்றைக்கு இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக ரூபாய் தாள்களில் லட்சுமி மற்றும் விநாயகர் படங் களை மோடி அரசாங்கம் அச்சிட வேண்டும் என கெஜ்ரிவால் கோரியிருப்பது தேர்தல் களில் வெற்றிபெற ஒரு வக்கிரமான அணுகுமுறை!

இந்த வக்கிர அணுகுமுறை 2015ஆம் ஆண்டு தில்லி சட்டமன்ற தேர்தல்களில் தலைதூக்கின. சில வேட்பாளர்களின் கடந்த  கால மோசமான பின்னணி குறித்து யோகேந்திர  யாதவும் பிரசாந்த் பூஷணும் கேள்வி எழுப்பி னர். தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வுகள் பல மூத்த கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி னாலும் அவர்கள் அமைதி காத்தனர். 2017 பஞ்சாப் தேர்தல்களிலும் பின்னர் தில்லி மாநகர தேர்தல்களிலும் கிடைத்த தோல்வி ஆம்  ஆத்மி கட்சியை திசைமாற்றுவதில் இறுதி கார ணங்களாக அமைந்தன. பின்னர் அந்த கட்சி  தனது தவறான பாதையை திரும்பி பார்க்கவே  இல்லை. வசதி படைத்த பலருக்கும் கட்சியில் எவ்வித தொடர்பும் இல்லாதவர்களுக்கும் மோசமான பின்னணி கொண்ட பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப் பட்டன. மக்களவை, மாநிலங்களவை மற்றும்  சட்டமன்றங்களில் போட்டியிடும் வாய்ப்புக் காக பணம் கை மாறியது எனும் குற்றச்சாட்டு களும் எழுந்தன. இது குறித்தும் ஏன் கட்சி தான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து விலகியது என்பதற்கும் சரியான விளக்கத்தை தரவே இல்லை.

மதக்கலவரங்களை கண்டு கொள்ளாத கெஜ்ரிவால்

நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் தேர்தல்களில் வெற்றி பெற இந்துத்துவா ஒரு அரசியல் சூத்திரமாக உருவான பின்னர்  ஆம் ஆத்மி கட்சி ஊசலாட்டத்தில் சிக்கியது. தானும் அதே இந்துத்துவ பாதையில் சென்றால்தான்  தேர்தல் வெற்றி சாத்தியமா எனும் சிந்தனை மேலோங்கியது. கெஜ்ரிவால் மிக ஆபத்தான தவறை கைக்கொண்டார். எந்த விலை கொடுத்தாவது தேர்தலில் வெல்ல முனைந்தார். 2017ஆம் ஆண்டு பஞ்சாப் தேர்தல்களில் வென்று விடுவோம் என இறுமாப்புடன் இருந்தார். ஆனால் தோல்வியே கிடைத்தது. எனவே 2020 தில்லி தேர்தல்களில் எவ்வித வாய்ப்பையும் தவற விடுவது இல்லை என முடிவு செய்தார். தன்னை இந்துத்துவாவுக்கு விற்றுவிட்டார். வெற்றி பெறுவதற்கு பிரசாந்த் கிஷோரின் உதவியை பெற்றது மட்டுமல்ல; அவர் “அனு மார் மந்திரத்தை” உச்சரித்தார். தன்னை அனு மார் பக்தனாக வெளிப்படுத்திக் கொண்டார். அனுமார் கோவிலுக்கு சென்றதை அனைத்து காட்சி ஊடகங்களிலும் வெளியிடப்படுவதை உத்தரவாதம் செய்தார். குடியுரிமை சட்டத்தை  எதிர்த்தோ அல்லது ஷாகின் பாக் போராட்டம் குறித்தோ ஒரு வார்த்தை அவர் பேச வில்லை. வட கிழக்கு தில்லியில் மதக்கல வரங்கள் வெடித்த பொழுது அவர் அங்கு செல்லவில்லை. “முஸ்லீம் ஆதரவாளர்” எனும் முத்திரை தன் மீது விழுவதை மிகவும் ஜாக்கிரதையாக தவிர்க்க முனைந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறு வாழ்வு  தருவதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. 2020ஆம் ஆண்டு தில்லி சட்டமன்ற தேர்தல்களில் கிடைத்த மாபெரும் வெற்றி பழைய புரட்சிகரமான ஆம் ஆத்மி கட்சியின் சவப்பெட்டியில் அறைந்த கடைசி ஆணியாக அமைந்தது.

பஞ்சாபில் வென்ற பிறகு அவரது அடுத்த  இலக்காக குஜராத் அமைந்தது. குஜராத் மாநி லம்தான் இந்துத்துவாவின் முதல் பரிசோத னைக் களம் என்பது அனைவரும் அறிந்த  உண்மை. குஜராத் உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பாக சூரத் மற்றும் காந்திநகர் நகராட்சி களில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க வெற்றி களைப் பெற்றது. புத்திசாலித்தனமான ஊடக விளம்பரங்கள் மூலமும் படாடோபமான பிரச்சாரங்கள் மூலமும் ஆம் ஆத்மி கட்சி  மூன்றாவது அரசியல் சக்தியாக குஜ ராத்தில் உருவானது. ஒவ்வொரு வாரமும் கெஜ்ரிவால் அங்கு சென்றார். முக்கிய எதிர்கட்சி எனும் இடம் காங்கிரசின் கைகளி லிருந்து ஆம் ஆத்மி கட்சியின் கைகளுக்கு  சென்றுவிட்டதா எனும் ஒரு விவாதம் திட்ட மிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. 

பழைய ஆம் ஆத்மி கட்சியின் மரணம்

இந்த சூழலில் இரு நிகழ்வுகள் கெஜ்ரி வாலின் குஜராத் கனவை நிலை குலையச் செய்தது. ஒன்று குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் இட்டாலியா, மோடி குறித்து இழிவாகப் பேசி பெண்களை கோவில்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அது பாதுகாப்பானது அல்ல எனவும் கூறினார். மற்றொன்று ஆம் ஆத்மி கட்சியின் தலித் முகமாக இருக்கும் தில்லி அமைச்சர் ராஜேந்திர பால், கவுதம்,  பவுத்த மத நிகழ்வில் இந்து கடவுள்களை கும்பிட மாட்டேன் எனப் பேசியது குஜராத்தில் பாஜகவால் பெரிய பிரச்சாரமாக முன் னெடுக்கப்பட்டது. இவற்றின் பாதக தாக்கத்தை குறைக்க கெஜ்ரிவால் ரூபாய் தாள்களில் லட்சுமி-விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் எனக் கூறினார். தனது கூட்டங்களில் சங் பரிவாரத்தின் போர் முழக்கமான “ஜெய் ஸ்ரீ ராம்” என்பதை அடிக்கடி உச்சரித்தார். தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிறந்தவர் எனவும் கம்சனின் மகன்கள் கதையை முடிக்க அவதாரம் எடுத்திருப்பதாகவும் பேசினார்.

இந்து கடவுள்கள் கெஜ்ரிவாலுக்கு வாக்குகளை பெற்றுத் தருவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்றைய கெஜ்ரி வால் அன்று நான் அறிந்த கெஜ்ரிவால் அல்ல என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அந்த கெஜ்ரிவால் இந்திய  அரசியலை சுத்தப்படுத்துவது பற்றி பேசினார். இன்றைய கெஜ்ரிவால் அந்த அரசியலின் ஒரு அங்கமாக மாறிப்போனார். மோடியை தோற்கடிக்கவே அவரின் இந்துத்துவா ஆயுதத்தை கெஜ்ரிவால் எடுத்துள்ளார் என சிலர் கூறுகின்றனர். ஆனால் என்ன சிந்திக்க வேண்டும் எனில் “நம்பிக்கை அரசியலை” உருவாக்க வந்த ஆம் ஆத்மி கட்சி ஏன் தீய அரசியலால் விழுங்கப்பட்டது? மதத்தையும் அரசியலையும் கலக்கும் ஆபத்தான பாதையை ஏன் தேர்ந்தெடுத்தது?இவை சிந்திக்க வேண்டிய கேள்விகள். வெல்வதும் தோற்பதும் தேர்தல் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால் பழைய ஆம் ஆத்மி கட்சி யின் மரணம் என்பது சோகமான ஒன்று! கெஜ்ரி வால் ஒரு வேளை குஜராத் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் அவர் இந்திய  அரசியல் மீது தொடுத்த மோசமான தாக்குதலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது ஏவிய தாக்குதலும்  நிரந்தரமான  வடுவை உருவாக்கி விடும்.