states

img

என்னை பிராமணன் என்று சொல்வதற்கு பெருமைப்படுகிறேன்!

லக்னோ, பிப்.7- “பிராமணர் என்பது சாதியல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என்றும், “பிராமணர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அடுத்தவர்களின் முன் னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்” என்றும் பாஜகவை சேர்ந்த உ.பி.  மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார். தன்னை பிராமணன் என்று சொல் லிக் கொள்வதில் பெருமைப்படுவ தாகவும் தினேஷ் சர்மா குறிப்பிட் டுள்ளார். கவுதம புத்தர் நகரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதுபற்றி மேலும் பேசியிருப்ப தாவது: “உ.பி தேர்தலுக்காக நான் மாநி லம் முழுவதும் செல்கிறேன். என்னி டம் பலரும் பிராமணியம் மற்றும் சாதி வெறி குறித்த பாஜக-வின் நிலைப்பாடு பற்றியே கேள்வி எழுப்புகின்றனர். இது வெறும் பிராமணர் அல்லது குஜ் ஜார் அல்லது ஜாட்களின் அரசு இல்லை. ஆதித்யநாத் அமைச்சரவை யில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டுள்ளது. இது அனைவருக்குமான அரசு. ஒவ்வொரு சாதிக்கும் அதன் முக்கியத்துவம் உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும். நான் ஒரு பிராமணன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் அதை  அவமரியாதையாகப் பார்க்க வில்லை.

மற்றவர்களின் மகிழ்ச்சி யில் மகிழ்ச்சியைக் காண்பவரே பிரா மணர்கள். நான் தொழில்முறையில் ஒரு ஆசிரியர். முன்பெல்லாம் பிற மக் கள் நலனுக்காக பணியாற்றும் ஆசிரி யர்கள் மட்டுமே பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். மரியாதை நிமித் தமாகச் சாதிகள் கடந்து இப்போ தும் அவர்கள் கடவுளாகக் கருதப்படு கிறார்கள். சொல்லப்போனால் பிரா மணர் என்பது சாதியல்ல, உயர்ந்த வாழ்க்கை முறையைத்தான் பிராம ணன் என்பார்கள். அவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பிராமணர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்கி றார்கள். பாஜக அரசு அனைத்து தரப்பி னரின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வந்துள் ளது. இன்னும் சொல்லப்போனால், நான் மாநிலத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் மத்தியிலும் பேசி வருகிறேன். இஸ்லாமியர்கள் மத்தி யிலும் பாஜக-வுக்கான ஆதரவு அதி கரித்து வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.” இவ்வாறு தினேஷ் சர்மா பேசி யுள்ளார்.