மதுரை, நவ. 3 - காவலர் ஒருவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்ததுடன், பதவி உயர்வு, பணப் பலன்களை வழங்கவும் உத்தர விட்டுள்ளது. எந்தவொரு மனிதருக்கும், சாதி, இனம், மதம் என எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2007-2008-ஆம் ஆண்டு கிரேடு- 2 காவலர் நியமனத் தேர்வு நடத்தியது. அதில், காவலர் காஜா ஷெரீப்பும் பங்கேற்றார். தேர்வானோர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால், அவ ருக்கு பணி நியமனம் வழங்க வில்லை. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணையின்போது, ‘மனு தாரர் மனித நீதிப் பாசறை’ என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், மனுதாரருக்கு பணி நிய மனம் வழங்கவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதி பதி பட்டு தேவானந்த், “எந்த மனித னுக்கும் சாதி, இனம், நிறம், பிர தேசம் அல்லது மதம் போன்ற சமூக கலாச்சார அடையாளங்களின் அடிப்ப டையில் எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்கு சேவையாற்றுவதில் எந்த தடையும் இல்லாமல் தங்கள் திறனை நிரூ பிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
காவல்துறை தலைமை இயக்குநர் தாக்கல் செய்துள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் கூட, மனு தாரர் காவல் துறையில் கடமைகளை ஆற்றும்போது அவரின் நேர்மை குறித்து எந்தப் பிரச்சனையையும் எழுப்பவில்லை. அரசுப் பணியில் சேர்ந்தவுடன், சட்டப்பூர்வ விதிகளின்படி அவர் தனது பேட்ச்மேட்களுடன் சேர்ந்து பதவி உயர்வுக்கான பரிசீலனைக்கு இயல்பாகவே தகுதியுடையவராக இருப்பார். இதைப் பறிப்பது சமத்து வம் மற்றும் இயற்கை நீதிக்கு எதிரானது. பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி மூப்பு அடிப் படையில் பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், “காவலர் ஹாஜா ஷெரீப் அடைந்த மன வேதனையை இந்த நீதிமன்றத்தால் உணர முடி கிறது. இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக் கூடியது அல்ல. காவலர் ஹாஜா ஷெரீப் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது. இங்கு யாரும் உயர்ந்த வர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்துக்கு ஏற்ப சிந்தனை, மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதாபிமானம் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருமே வாழ முடியாது” என்றும் நீதிபதி பட்டு தேவானந்த் குறிப் பிட்டுள்ளார்.