புதுதில்லி, அக்.14- சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் ஜி.என்.சாய்பாபா மற்றும் பலர் மீதான வழக்கில், குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட வில்லை எனக் கண்டு அவர்கள் அனைவரையும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வாயம் விடுதலை செய்துள்ளது.இதனை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் வர வேற்றுள்ளார். இதுதொடர்பாக முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: டாக்டர் சாய்பாபாவை போன்று ஊனமுற்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஊனமுற்றோருக்கான சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள், நெல்சன் மண்டேலா விதிகள், ஊன முற்றோர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கன்வென்ஷன் ்கள், 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் மற்றும் பல சட்டங்களின் கீழ் போதுமான தங்கும் வசதி கள் செய்துதரப்பட வேண்டுமென்று ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை பலமுறை வலியுறுத்தியது.
இவ்வாறு பலமுறை மனித உரிமைகள் அமைப்பு களுக்கும், ஜனநாயக எண்ணம் கொண்டோருக்கும் ஊன முற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகளுக்கும் வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், டாக்டர் சாய்பாபா வுக்கு மருத்துவக் காரணிகளின் அடிப்படையிலும்கூட பிணை மறுக்கப்பட்டு, சிறையில் தொடர்ந்து அடைக் கப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தபோதிலும்கூட, அவற்றில் சில அவருடைய உயி ருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த போதிலும்கூட, அவர் பிணையில் விடுவிக்கப்படவில்லை. இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர் போதுமான அளவிற்கு மருத்துவக் கவ னிப்புப் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின் றன என நம்புகிறோம். நீதிக்கான போராட்டத்தில் சாய்பாபாவுடன் இணைந்து நின்ற அவருடைய மனைவி வசந்தா மற்றும் பலர் உறுதி யுடனும், தைரியத்துடனும் தொடர்ந்து நடத்தி வந்த போராட் டத்திற்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ந.நி)