states

பெண்களின் திருமண வயதை 16 ஆக குறைக்க வேண்டுமாம்!

போபால், ஜூலை 1 - பெண்களின் திருமண வயதை 18-இல் இருந்து 16 ஆக குறைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு குவாலியர் உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள் ளார். போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய் யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த  ராகுல் ஜாதவ் என்ற சிறுவன் தாக்கல் செய்த மனு, குவாலியர் உயர் நீதிமன்ற நீதிபதி தீபக் குமார் அகர்வால் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோச் சிங் வகுப்புக்கு வந்த சக மாணவியை சிறுவன் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உள் ளாக்கியுள்ளார்; அத்துடன் அதனை செல்போனில் படம் பிடித்து மாண வியை மிரட்டி அடிக்கடி பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கியதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி மைனர் என்பதாலேயே, சம் பந்தப்பட்ட குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது; எனவே, அதனை ரத்து செய்யக் கூடாது” என்று வாதிட்டார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குமார் அகர்வால் குறுக் கிட்டு, “14 வயதிலேயே சிறுவர்களும் சிறுமிகளும் பருவம் அடைந்து விடுகின்றனர்; சமூக வலைத்தளங்கள் வழியாக அனைத்து விவரங்களையும் அறிவதால், முதிர்ச்சி அடைந்து விடு கின்றனர்; இதனால் இரு பாலினத்த வரும் ஒருவர் பால் மற்றொருவர் ஈர்க்கப் படுவதால் தவறுகள் ஏற்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், “நிலைமை இவ்வாறு இருக்கையில், 18 வயது கீழ் உள்ள சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக மாற்றப்படுவது பருவ வயது சிறுவர்களுக்கு இழைக் கப்படும் அநீதி” என்று கூறிய நீதிபதி, “பெண்களின் திருமண வயதை 18-இல் இருந்து 16 ஆக குறைக்க வேண் டும் என்றும் இதற்கு, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.