states

பாஜக அலுவலகமான ஆளுநர் மாளிகை

இராமநாதபுரம், அக். 30 - ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி விட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.  ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இலங்கை கடற் படையினரால் தமிழ்நாட்டு மீன வர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்களே.. என்று செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது” என்ற ஸ்டாலின், திங்களன்று காலை நம்முடைய நாடாளுமன்றக் குழு வின் தலைவர் டி.ஆர். பாலுவை புதுதில்லிக்கு அனுப்பி வைத்திரு க்கிறேன். இராமநாதபுரம் பகுதி யில் இருக்கக்கூடிய மீனவர் சமுதாயத்தின் சில நிர்வாகிகளை யும் அழைத்துச் செல்லுமாறு கூறி யிருக்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்தார்.

“ஆரியம் - திராவிடம் குறித்து சர்ச்சை உருவாக்கப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, “இன்னார்க்கு  மட்டுமே இது” என்று சொல்வது ஆரியம். “எல்லார்க்கும் எல்லாம் உண்டு” என்று சொல்வது திரா விடம். இந்த வித்தியாசத்தை, இந்த உண்மையை தயவுசெய்து நம்முடைய ஆளுநர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். “ஆளுநர் மாளிகையில் பாட்டில் குண்டு வீசப் பட்டுள்ளதே..” என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட வில்லை. மாளிகைக்கு வெளி யில் தெருவில் வீசப்பட்டிருக் கிறது. அதனுடைய சிசிடிவி  காட்சிகள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிரு பர்களை அழைத்து வெட்ட வெளிச்சமாக காண்பித்திருக் கிறார்கள். ஆளுநர் மாளிகை யிலிருந்து திட்டமிட்டு இந்தப் பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், “ஆளுநர் இன்றைக்கு பாஜக கட்சிக்கார ராக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பாஜக கட்சியின் அலுவலகமாக மாறியிருக்கிறது” என்று குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின் “அதுதான் வெட்கக் கேடு” என்றும் காட்டமாக சாடினார்.